tamilnadu

img

செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்

நாகர்கோவில், அக்.5- நீதிமன்ற உத்தரவுப்படி சமவேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு எம்ஆர்பி செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் சார்பில் நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட தலைவர் லில்லி புஷ்பம் தலைமை வகி த்தார். மாவட்ட செயலாளர் கார்த்திகேயன் வரவேற்றார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில செயலாளர்கள் சி.ஆர்.ராஜ்குமார், சி.எஸ்.கிறிஸ்டோபர், பி.வி.ராஜன் ஆகியோர் பேசினர்.