tamilnadu

img

தமிழகத்தில் தற்போது இடைத்தேர்தலுக்கு வாய்ப்பில்லை - இந்திய தேர்தல் ஆணையம்

தமிழகத்தில் தற்போதைய சூழலில் இடைத்தேர்தலுக்கு வாய்ப்பில்லை என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 
தமிழகத்தில் திருவெற்றியூர் குடியாத்தம் சட்டசபை தொகுதி எம்எல்ஏக்கள் காலமானதால் இரண்டு தொகுதிகள் காலியாக உள்ளது என பிப்ரவரி 27ம் தேதி மற்றும் 28ம் தேதிகளில் அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து ஆகஸ்ட் 26 , 27ம் தேதிக்குள் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும் ஆனால் தற்போது கொரோனா பெருந்தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த சூழலில் தேர்தல் நடத்துவது மக்களின் பாதுகாப்புக்கு உகந்தது இல்லை. இதனால் வரும்  செப்டம்பர் 2ம் வாரம் வரை தேர்த நடத்த வாய்ப்பில்லை. அதன் பின் சூழலுக்கு ஏற்ப முடிவு எடுக்கப்படும் என இந்திய தலைமைத்தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 
இந்லையில் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி எம்எல்ஏ அன்பழகன் கொரோனா தொற்றால் உயிரிழந்ததால் அந்த தொகுதியும் காலியாக உள்ளது. குறிப்பிடத்தக்கது.