tamilnadu

img

நீட் தேர்வு ஆள்மாறாட்டம் : மேலும் ஒரு மாணவி கைது

நீட் தேர்வு முறைகேடு வழக்கில் ,மேலும் ஒரு மருத்துவ கல்லூரி மாணவியை சிபிசிஐடி காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

தேனி அரசு மருத்துவக் கல்லூரியில், பயின்று வந்த மாணவர் உதித் சூர்யா நீட் தேர்வு முறைகேட்டில் கைதுசெய்யப்பட்டார். இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில் கூடுதலாக 4 மாணவர்களும் அவர்களின் தந்தைகளும் கைது செய்யப்பட்டனர். இதனை தொடர்ந்து தற்போது மேலும் ஒரு மாணவி கைது செய்யப்பட்டுள்ளார். கிருஷ்ணகிரியை சேர்ந்த இந்த மாணவி சென்னை உள்ள தனியார் கல்லூரியில் பயின்று வந்துள்ளார். இந்நிலையில் கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் இவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதில் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்தது உறுதியானதை அடுத்து தேனி சிபிசிஐடி மாணவியை கைது செய்துள்ளனர்.
 

;