தஞ்சாவூர், ஜூன் 15- நாங்கூரில் கி.மு.3 ஆம் நூற் றாண்டை சார்ந்த தொல்லியல் சான்று கள் தமிழ்ப் பல்கலைக்கழக தொல்லி யல் துறை சார்பில் கண்டுபிடிக்கப் பட்டன. நாகப்பட்டினம் மாவட்டம் நாங்கூ ரில் தமிழ்ப் பல்கலைக்கழக கடல்சார் வரலாறு மற்றும் கடல்சார் தொல்லி யல் துறை இணை பேராசிரியர் செல்வ குமார் தலைமையில் பல்கலைக்கழக நல்கைக்குழுவின் நிதி உதவியுடன் அகழ்வாராய்ச்சி கடந்த மே 17 ஆம் தேதி துவங்கி நடந்து வருகிறது. இதில் பல்வேறு தொல்லியல் சான்றுகள் கிடைத்துள்ளன. இது குறித்து செல்வக்குமார் கூறிய தாவது:
நாங்கூர் ஒரு சங்க கால வாழ்விட மாகும். பட்டினப்பாலையிலும், பொரு நராற்றுப்படையிலும் இடம் பெற்றுள் ளன. கரிகாலன், நாங்கூர் வேளின் பெண்ணை மணந்ததாகக் குறிப்பிடும் ஒரு செய்தியும் உள்ளது. தாய்லாந்தில் உள்ள தாக்குவா பகுதியில் கிடைத்த ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ் கல்வெட்டு, நாங்கூருடையான் என்பவர் அங்கு ஒரு குளம் வெட்டி யுள்ளதாக குறிப்பிட்டுள்ளதன் மூலம் அவர் நாங்கூர் பகுதியை சேர்ந்தவ ராக இருக்கலாம். மேலும் பதினோரு வைணவ திவ்ய தேசத் தலங்கள் உள்ளன. இங்கு பல சிவன் கோவில்களும், சோழர், பாண்டி யர் கல்வெட்டுகளும் உள்ளன. அகழ்வாய்வில் கறுப்பு, சிவப்பு பானை வகைகளும், மீன் உருவம் உள்ள பானையோட்டுக் கீறல் குறியீடுகள், இரும்புப் பொருள்கள் செய்யும் கொல் லர் பட்டறைகள், கூறை ஓடுகள், சுடு மண் பொம்மைகள், திருமால் உருவம் பொரித்த முத்திரைப் பதிவுகள், கண் ணாடி மணிகள், கல்மணிகள் போன் றவை கிடைத்துள்ளன.
இங்கு வாழ்விடச் சான்றுகள் மூன்று மீட்டர் ஆழத்திற்கும் மேல் மணல் படர்ந்துள்ளன. நாங்கூர் கி.மு.3 ஆம் நூற்றாண்டைச் சார்ந்த சங்க கால ஊர் என்பது உறுதியாகியுள்ளது. பிற்காலத் தில் திவ்ய தேசங்களாகவும், தேவாரத் தலங்களாகவும் அறிய முடிகிறது” என்றார். பல்கலைக் கழக துணைவேந்தர் கோ.பாலசுப்பரமணியன், தரங்கம் பாடி டேனிஷ் வரலாற்றை ஆராயும் அமெரிக்கப் பல்கலைக்கழகப் பேரா சிரியர் மார்க் ஹௌசெர் ஆகியோர் அகழாய்வு இடத்தைப் பார்வையிட்ட னர்.