வேலூர்,நவ.9- ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் முருகன் வேலூர் ஆண்கள் சிறையிலும், அவரது மனைவி நளினி பெண்கள் சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர். முருகன் அறை யில் செல்போன் சிக்கியதால் அவருக்கான சலுகைகளை சிறைத்துறை நிர்வாகம் ரத்து செய்தது. இதனால் நீதிமன்ற உத்தர வுப்படி 15 நாட்களுக்கு ஒரு முறை நளினி யுடன் சந்திப்பு அனுமதி மறுக்கப்பட்டது. தன்னை தனி அறையில் அடைத்து கொடுமைப்படுத்துவதாக கூறி முருகன் உண்ணாநிலை மேற்கொண்டார். இந்த போராட்டத்தை கைவிட முருகனிடம் சிறை யில் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி னர். அப்போது, மீண்டும் சலுகை வழங்க வேண்டும். நளினியை சந்திக்க அனு மதிக்க வேண்டும் என முருகன் கோரிக்கை விடுத்தார். இது குறித்து நடவடிக்கை எடுக்கப் படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர். இதையடுத்து முருகன் தனது போராட் டத்தை முடித்து கொண்டார். இந்த நிலையில், சனிக்கிழமையன்று (நவ.9) நளினியை சந்தித்து பேச சிறைத் துறை அனுமதி அளித்தது. இதையடுத்து ஒரு மாதத்திற்கு பிறகு கலால் டி.எஸ்.பி. ராஜேந்திரன் தலைமையில் பலத்த காவல் பாதுகாப்புடன் முருகனை வேலூர் பெண்கள் சிறைக்கு அழைத்து சென்றனர். அங்கு காலை 8.50 மணி முதல் 9.50 மணி வரை சந்தித்து பேசினார். சந்திப்பு முடிந்த தும் முருகன் மீண்டும் ஆண்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.