tamilnadu

img

மோட்டார் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்

நெருக்கடிக்குள்ளாக்கும் இராஜபாளையம் காவல்துறை

இராஜபாளையம், அக்.22- மோட்டார் தொழிலாளர்களையும், தொழிலையும் கடும் நெருக்கடி கொடு க்கும் இராஜபாளையம் காவல்துறை யின் அநியாய நடவடிக்கைகளைக் கண்டித்து செவ்வாயன்று டாக்சி தொழிற்சங்கத்தினர் (சிஐடியு), லாரி உரிமையாளர் சங்கம், ஆட்டோ தொழி லாளர் சங்கம், இருசக்கர வாகன பழுது பார்ப்போர் சங்கம் உட்பட மோட்டார் தொழிலில் ஈடுபடும் 500-க்கும் மேற்பட்டோர் தங்களது வாகனங்களை இராஜபாளையம் வட்டாட்சியரிடம் ஒப்படைக்கும் போராட்டத்தை அறிவித்தனர்.

இதையடுத்து காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் வட்டாட்சி யரிடம் நாகசங்கர் சிஜடியு மாவட்டச் செயலாளர் பி. என்.தேவா, சாலைப் போக்குவரத்து சங்க மாவட்டத் தலைவர் ஜி.கணேசன், செயலாளர் எம். திருமலை, சிஐடியு கன்வீனர் சுப்ர மணியன், இராஜபாளையம் டாக்சி-வேன் சங்கத் தலைவர் விஜயகுமார், செயலாளர் கண்ணன் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.  அப்போது அவதூறகப் பேசும் காவல்துறையினர் மீது உரிய நட வடிக்கை எடுக்கப்படும். காவல்துறை யினர், தொழிற்சங்கங்கள் இணைந்த கூட்டுக் கூட்டம் நடத்தப்படும். அதில் அபராத நடவடிக்கைகள் முறைப் படுத்தப்படும் என காவல்துறை துணைக் கண்காணிப்பாளர்  உறுதியளித்தார். இதையடுத்து வாகன ஒப்படைப்புப் போராட்டம் ஆர்ப்பாட்டமாக மாற்றப் பட்டது. போராட்டத்தையொட்டி இராஜ பாளையத்தில் டாக்சி, வேன், லாரி, ஆட்டோ ஆகியவை ஓடவில்லை.