சென்னை ஏப்.10- தமிழகத்தில் 25க்கும் குறைவான மாணவர் சேர்க்கை கொண்ட அரசுப் பள்ளிகள் விவரங்களைச் சேகரித்து அனுப்புமாறு மாவட்டக் கல்வி அதிகாரிகளுக்குப் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் குறைவான மாணவர் சேர்க்கை கொண்ட பள்ளிகளை அருகில் உள்ள பள்ளிகளுடன் இணைக்கக் கல்வித்துறை நடவடிக்கை எடுத்தது. அதன்படி ஒரு மாணவர் கூட இல்லாத 40க்கு மேற்பட்ட அரசுப் பள்ளிகள் மூடப்பட்டு நூலகங்களாக மாற்றப் பட்டன. இதற்கு எதிர்ப்பு எழுந்ததால் அந்த நடவடிக்கை நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில், 25க்கும் குறைவான மாணவர் சேர்க்கை கொண்ட அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கை, அவற்றில் பணிபுரியும் ஆசிரியர்கள் மாணவர்களின் விவரங்கள் உள்ளிட்ட தகவல்களைச் சேகரித்து அறிக்கையாகத் தொகுத்து அனுப்பும்படி பள்ளிக்கல்வி இயக்ககம் சார்பில் அனைத்து மாவட்ட முதன் மைக் கல்வி அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.