வேலூர், மே 6- வேலூர் மாவட்டம், பேர்ணாம்பட் தாலுகா, கார்கூர் ஊராட்சி கானாங்குட்டை பகுதியில் இருளர் இனத்தைச் சேர்ந்த 25 குடும்பங்கள் வாழ்ந்து வரு கின்றன. அந்த மக்கள் படுத்துறங்க வீடும் இல்லை, உண்ண உணவும் கிடையாது. தலை காய்ந்த மக்க ளுக்கு குடும்ப அட்டையும் இல்லை. இதனால் அரசு வழங்கும் இலவச அரிசியும், நிவாரணத் தொகை யும் வழங்கப்படவில்லை.
கொரோனா வைரஸ் தொற்றால் வாழ்வாதா ரம் இன்றி தவிக்கும் இந்த மக்களுக்கு உதவுங்கள் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் பேர்ணாம்பட்டு பகுதி செயலாளர் பி. குண சேகரன் வேண்டுகோள் விடுத்தார். இதனையடுத்து, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி வேலூர் மாவட்டச் செயலாளர் வி. குபேந்திரன், அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழி யர்கள் சங்க வேலூர் மாவட்டச் செயலாளர் டி.தமிழ் மணி, சிபிஎம் கிளைச் செயலாளர் சுரேஷ் ஆகியோர் நிவாரணப் பொருட்களை வழங்க முன்வந்தனர். மேல்பட்டியிலிருந்து 4 கி.மீ தொலைவில் உள்ள கானாங்குட்டை பகுதிக்கு சிபிஎம் பகுதி செயலாளர் பி. குணசேகரன் 100 கி.மீ அரிசி நிவாரண பொருட்க ளுடன் நடந்தே சென்று வழங்கினர்.
இதுகுறித்து தலைவர்கள் கூறுகையில், “மேல்பட்டி கிராமத்தில் உள்ள ஏரிக்கு தண்ணீர் போகும் கால்வாய் கரையில் ஒண்டி குடிசையில் (சிறிய அளவில்) பார்ப்பதற்கு வேதனையாக இருந்தது. அந்தக் குடிசைக்குள், குழந்தைகள் உடுத்த உடைகள் இன்றி கிழிந்த ஆடைகளுடன் வசித்து வந்தது எங்கள் கண்கள் கண்ணீர் குள மாகிவிட்டது” என்றனர்.
உணவும், உடையும், வசிக்க இடமும் இல்லா மல் விளிம்பு நிலை மக்களில் குழந்தைகளுக்கு கல்வி எட்டாக்கனியாக உள்ளது. இத்தகைய சூழ்நிலையிலும், எஸ்.தரணி,எஸ். பிரசாந்த் என்ற இரு மாணவர்கள் பத்தாண்டுகளுக்கு முன்பு அரசு பள்ளியில் படித்து பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர். மாணவன் பிரசாந் 380 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். ஆனாலும் மேல் படிப்பு செல்ல முடியவில்லை. காரணம் தடையாக இருந்தது சாதிச் சான்றாகும். பலமுறை விண்ணப் பித்தும் அதிகாரிகள் வழங்காததால் பத்தாவது உடன் படிப்பை முடித்துக் கொண்டனர். பத்தாம் வகுப்பை முடித்து பதினோராம் வகுப்பில் சேர தாழ்த்தப்பட்டோருக்கான எஸ்சி சாதி சான்று கேட்டு அலைந்து திரிந்து இறுதியில் மரம் ஏறும் தொழிலாளர்களாக்கியது இந்த அரசு. இருளர் இனத்தில் பிறந்தது அந்த மாணவர்கள் குற்றமா? என்றும் அரசுக்கு கேள்வி எழுப்பி உள்ளனர்.