tamilnadu

img

தமிழகத்தில் ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம்

சென்னை,ஆக.12- தமிழகத்தில் ஐ.பி.எஸ். அதிகாரிகள் 9 பேரை பணி யிட மாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது.  இது குறித்து தமிழக அரசு பிறப் பித்த உத்தரவில் கூறியிருப்ப தாவது: காத்திருப்போர் பட்டிய லில் வைக்கப்பட்டிருந்த முன் னாள் தூத்துக்குடி எஸ்.பி  அருண்பாலகோபாலன் சென்னை சைபர் பிரிவு  எஸ்பி-2 ஆக மாற்றப்பட்டுள் ளார்.  சென்னை சை பர் பிரிவு எஸ்பி-2 ஆக பதவி வகித்த ஓம் பிரகாஷ் மீனா சென்னை நிர்வாக ஏ.ஐ. ஜியாக மாற்றப்பட்டுள்ளார். சென்னை நிர்வாக ஏ.ஐ.ஜி. சிபிசக்ரவத்தி சிபி சிஐடி சைபர் செல் எஸ்.பியாக மாற்றப்பட்டுள்ளார்.  சிபிசிஐடி சைபர் செல் எஸ்.பி ஜெயலட்சுமி தமிழ்நாடு போலீஸ் அகாடமியின் எஸ்.பி.யாக மாற்றப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு போலீஸ் அகா டமியின் எஸ்.பி.யாக உள்ள ஜெயச்சந்திரன் தமிழ்நாடு  கமாண்டோ படைப் பிரிவு எஸ்.பி.யாக மாற்றப்பட்டுள் ளார்.  தமிழ்நாடு கமாண்டோ படைப்பிரிவு எஸ்.பி.யாக இருந்த சி.ஷியாமலா தேவி சென்னை நில அபகரிப்பு தடுப்புப் பிரிவு சிறப்பு பிரிவு எஸ்.பி.யாக மாற்றப்பட்டுள் ளார். சென்னை நில அபகரிப்பு தடுப்புப் பிரிவு சிறப்பு பிரிவு எஸ்.பி.யாக இருந்த கண்ணம்மாள் சென்னை, மத் திய குற்றப்பிரிவு துணை  ஆணையர்-2 ஆக மாற்றப் பட்டுள்ளார். சென்னை, மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையர்-2 ஆக இருந்த தீபா சத்யன் அம்பத்தூர் துணை ஆணையராக மாற் றப்பட்டுள்ளார். அம்பத்தூர் துணை ஆணையர் நிஷா  சென்னை சைபர் பிரிவு எஸ்பி- 2 ஆக மாற்றப்பட்டுள்ளார்.