tamilnadu

img

பாமக-தேமுதிக மோதலால் அதிமுக கலக்கம்

விழுப்புரம், அக். 22- விழுப்புரம் மாவட்டம் விக்கிர வாண்டி தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடந்த போது, வாக்குச்சாவடி மையங்களில் திமுக, அதிமுக கூட்டணி கட்சிக ளின் நிர்வாகிகள் வாக்குச்சாவடி முகவர்களாக செயல்பட்டனர். அந்த வகையில் விக்கிரவாண்டி தொகுதிக்குட்பட்ட காணை ஒன்றி யம் கல்யாணம்பூண்டி கிராமத்தில் உள்ள அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தின் அருகில் தேமுதிகவி னர் வாக்குச்சாவடி அமைத்து வாக்காளர்களிடம் அதிமுகவிற்கு ஆதரவு திரட்டிக் கொண்டிருந்தனர்.  அந்த சமயத்தில் அங்கு வந்த பாமக, தேமுதிக பிரமுகர்கள் பணத்தை பிரித்துக்கொள்வதில் இருவருக்கும் இடையே கடும் வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த தேமுதிக பிரமுகர்,   பாமக பிரமுகரை தாக்கினார். பதி லுக்கு பாமக பிரமுகர், தேமுதிக  பிரமுகரின் சட்டையை கிழித்தார். இதனால் ஆத்திரமடைந்த  தேமுதிக வினர், பாமக பிரமுகரை தாக்கினர்.  உடனடியாக  காவல்துறையினர் வந்து சமாதானம் செய்து அங்கி ருந்து அப்புறப் படுத்தினர். அ.தி.மு.க. கூட்டணி கட்சிகளான  பா.ம.க., தே.மு.தி.க. கட்சியினர் வாக்குச்சாவடி மையத்துக்கு அருகே நடுரோட்டில் ஒருவரை யொருவர் தாக்கி, சட்டையை கிழித்துக்கொண்ட சம்பவம்  இடைத்தேர்தலில் அதிமுகவிற்கு பாமக, தேமுதிக வாக்கு கேள்வி  குறியாகியுள்ளதால் அதிமுக  வட்டாரத்தில் கலக்கம் ஏற்பட்டுள் ளதாக தெரிவிக்கின்றனர்.