tamilnadu

img

உள் மாவட்டங்களில் அதிகரிக்கும் கொரோனா

முதல்வர் முக்கிய ஆலோசனை!

சென்னை, ஜுன் 23- இந்தியாவில் கொரோனா பாதிப்பு மின்னல் வேகத்தில் பரவி வரும் நிலையில்,  கடந்த 24 மணி நேரத்தில் 14,933 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதால் மொத்த  மதிப்பு 4 லட்சத்து 40 ஆயிரத்து 215 ஆக அதிகரித்துள்ளது. இறப்பு எண்ணிக்கை 14 ஆயிரத்து 11 ஆக உள்ளது. தினசரி 10 ஆயிரத்துக்கும் அதிக மானோர் வைரஸ் பாதிப்புக்கு ஆளாகி வரும் நிலையில், இதில் மகாராஷ்டிரா மற்றும் தமிழகத்தைச் சேர்ந்தவர்களே அதிகம்.

இதுவரை இல்லாத அளவுக்கு உச்ச பட்சமாகத் தமிழகத்தில் திங்கள், ஒரே  நாளில் மட்டும் 2,710 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. தற்போது சென்னையைப் போன்று உள் மாவட்டங் களிலும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. நேற்று 1,487 பேருக்குச் சென்னையில் உறுதிசெய்யப்பட்ட நிலை யில், செங்கல்பட்டு, மதுரை, திருவள் ளூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங் களில் பாதிப்பு 100க்கும் அதிகமாகப் பதிவானது. உள் மாவட்டங்களில் பாதிப்பு அதி கரித்து வரும் நிலையில், வீடு வீடாகச் சோதனை செய்யும் மைக்ரோ திட்டத்தை முன்னெடுக்க வேண்டுமென்று தலை மைச் செயலாளர் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் எழுதிய கடிதத்தில் வலியுறுத்தியிருந்தார். இந்த சூழலில் புதனன்று அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் எடப் பாடி பழனிசாமி ஆலோசனை நடத்த வுள்ளார்.

ஜூன் 17ஆம் தேதி தமிழக முதல்வர் உள்ளிட்ட பாதிப்பு அதிகமுள்ள மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்திய நிலையில், புத னன்று அனைத்து மாவட்ட ஆட்சியர்களு டன் முதல்வர் ஆலோசனை நடத்து வார் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையைத் தீவிரப்படுத்துவது, பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து  ஆலோசிக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அதுபோன்று மாவட்ட ஆட்சியர்களின் கருத்தைக் கேட்டு முதல்வர் முக்கிய அறிவிப்பை வெளி யிடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே சென்னை போன்று மதுரையிலும் அடுத்த ஏழு நாட்களுக்கு முழு ஊரடங்கைத் தமிழக அரசு அமல் படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.