மே.பாளையம், ஜூலை 20- மேட்டுப்பாளையத்தில் உள்ள பில்லூர் அணைக்கு நீர்வரத்து அதிக ரித்துள்ளதால், நீர்மின் உற்பத்தி பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேற்குத்தொடர்ச்சி மலையில் உள்ள கேரள மற்றும் நீலகிரி மலைக் காடுகளில் பெய்யும் மழை நீரை ஆதாரமாக கொண்டு கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் பில்லூர் அணை கட்டப்பட்டது. கோவை, திருப்பூர் என இரு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ள பில்லூர் அணை யின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழை காரணமாக அணைக்கான நீர் வரத்து அதிகரிக்க துவங்கியுள்ளது. அணையின் நீர் தேக்க உயரம் 100 அடி என்ற நிலையில் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு அணையின் நீர்மட்ட உயரம் 80 அடிக்கும் கீழாக இருந்தது. இந்நிலையில், அணை யின் நீர்ப்பிடிப்பு பகுதிகள் மற்றும் மலைக்காடுகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக அணைக் கான நீர்வரத்து உயர துவங்கியது.
கடந்த ஜூலை 18 ஆம் தேதி பில்லூர் அணையின் நீர்வரத்து வினா டிக்கு 3 ஆயிரத்து 500 கன அடியாக அதிகரித்த காரணத்தால் அணை யின் நீர்மட்ட உயரம் 80 அடியில் இருந்து 85 அடியாக உயர்ந்தது. இரு நாட்களில் அணையின் நீர்மட்ட உய ரம் ஐந்தடி வரை உயர்ந்த நிலை யில் மழையின் வேகம் சற்று குறைந்த நிலையில் அணையின் நீர் வரத்து வினாடிக்கு ஆயிரத்து 300 கன அடியாகவும், அணையின் நீர்மட்டம் 86.75 அடியாகவும் உள்ளது. நீர் வரத்து அதிகரிக்க துவங்கியுள்ள தால் அணையில் உள்ள நீர்மின் உற்பத்தி நிலையத்தில் மின் உற்பத்தி பணிகளும் வேகமெடுத் துள்ளது. தற்போது மின் உற்பத்திக் காக அணையில் இருந்து வினா டிக்கு 3 ஆயிரம் கனஅடி நீர் பவானியாற்றில் திறந்து விடப்பட்டு வருகிறது. இதனால் மேட்டுப்பா ளையத்தை கடந்து செல்லும் பவானி யாற்றின் வேகமும் அதிகரித்துள் ளது. மேலும், மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகளில் மழை தொடர்ந் தால் நான்கைந்து நாட்களில் பில்லூர் அணை அதன் முழு கொள்ளளவை எட்டி விடும் என கருதப்படுகிறது. பில்லூர் அணையில் இருந்து பவானியாற்றில் திறந்து விடப்படும் தண்ணீர் ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானி சாகர் அணையை சென்றடைவதால் அந்த அணையின் நீர்மட்ட உயரமும் அதிகரிக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது.