திருச்சி,ஏப்.16- திருச்சி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து மீண்ட 32 பேர் வீடுகளுக்கு திரும்பினர். திருச்சி அரசு மருத்துவமனையில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வந்தனர். இவர்களில் 32 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து ஒரே நாளில் குணமடைந்தனர்.
அவர்களை வழியனுப்பும் நிகழ்ச்சி வியாழனன்று திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு, மாநகர ஆணையர் சிவசுப்பிரமணியன், மருத்துவமனை டீன் வனிதா உள்ளிட்டோர் முன்னிலையில் நடைபெற்றது. குணமடைந்த 32 பேர் ஆறு ஆம்புலன்ஸ், ஒரு பேருந்தில், அவரவர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.