திருச்சியில் தனது வாகனத்தை தானே எரித்து பதற்றத்தை உருவாக்க முயற்சித்த இந்து முன்னணி பிரமுகர் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருச்சியில் மணிகண்டம் பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல் . இவர் இந்து முன்னணி பிரமுகராக அப்பகுதியில் வலம் வந்தார். இந்நிலையில் இந்து முன்னணி கட்சியில் முக்கிய பதவி பெற சக்திவேல் திட்டமிட்டு தனது வாகனத்திற்கு தானே தீ வைத்து நாடகமாடினார். இதைத்தொடர்ந்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் சக்திவேல் தனது வாகனத்திற்கு தானே தீ வைத்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து சக்திவேல் உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.