சு.வெங்கடேசன் எம்.பி., பேச்சு
புதுக்கோட்டை, நவ.2- தனது ஆன்மீக அரசியலை முன்னுறுத்தியே மதவெறி அரசியலை எதிர்த்தவர் மகாத்மா காந்தி என்றார் மதுரை நாடாளுமன்றத் தொகுதி உறுப்பி னர் சு.வெங்கடேசன். புதுக்கோட்டையில் வியா ழக்கிழமையன்று ‘காந்தி 150’ என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் கலந்து கொண்டு அவர் மேலும் பேசியது: காலம் முழுவதும் கம்யூனிஸ்டுகளை விமர் சித்துக் கொண்டே இருந்தவர் காந்தி. கம்யூ னிஸ்டுகளின் கொள்கைகளை மீண்டும் மீண்டும் கேள்விக்கு உட்படுத்திக் கொண்டே இருந்தார். இவ்வளவு போராட்டம் நடத்துகிறீர்களே! உங்க ளுக்கு நிதி எங்கிருந்து வருகிறது என்று முதலில் கேட்ட தேசியத் தலைவர் காந்தி தான். அன்றைய கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் ஜோஷி “நீங்கள் எந்த சாமான்ய மக்களைப் பற்றிப் பேசு கிறீர்களோ அவர்கள் தான் எங்களுக்கு நிதி தரு கிறார்கள்” என்றார்.
அதே நேரத்தில், தேசத்தின் மகத்தான தலை வர் காந்தி என்பதை சந்தேகத்திற்கு இடமின்றி மதித்தவர்கள் கம்யூனிஸ்டுகள். எண்ணற்ற கடிதம் மூலம் காந்திக்கும் கம்யூனிஸ்டுகளுக்கும் இடையே உரையாடல் நிகழ்ந்துள்ளது. காந்தி யின் அரசியல், சித்தாந்தம் எல்லாவற்றிலும் கம்யூ னிஸ்ட்டுகள் உடன்பட முடியாது. ஏன் காங்கி ரஸ் காரர்களாலேயே முடியாது. அவரது ஆத்ம சிஷ்யன் நேருவாலேயே உடன்பட முடியாது. நவீன இந்திய குறித்து இருவருக்கும் எதிர் எதிரான கருத்து இருந்தது. ஆனால், தனக்கு அடுத்த தலைவர் யார் எனும் போது எந்தத் தயக்கமும் இல்லாமல் நேருவை முன்மொழிந் தார் காந்தி. அது தான் அரசியலின் மாட்சிமை யான இடம். 17-ஆவது நாடாளுமன்றத்தின் பதவியேற்பு விழா முடிந்து இரண்டாவது நாளில் மோடி அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்தினார். அதில் முதல் அஜண்டா காந்தி 150-ஆவது விழாவை எப்படிக் கொண்டாடுவது என்பதுதான். ஆனால், கூட்டத்தின் நோக்கம் அதுவல்ல. இரண்டாவது அஜண்டாவான பன்மைத்துவ அரசியல் இந்தியாவில் வெற்றி பெற்றுவிட்டதா? பல கட்சி ஆட்சி முறை தேவையா? என்பது தான். அந்தக் கூட்டத்தில் காந்தி 150-ஆவது ஆண்டை ஏன் கொண்டாட வேண்டும் என்று எழுத்துப்பூர்வ மாக எங்கள் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி எடுத்து வைத்தார். அவர்கள் காந்தி 150 ஆண்டை எப்படிக் கொண்டாடினர் என்பது உங்களுக்கெல்லாம் தெரியும். காந்தியை கொண்டாட வேண்டும் என்ற எண்ணம் இவர்களுக்கு துளிகூட இல்லை. காந்தி நினைக்கப்படக் கூடாது என்பது தான் இவர்களின் நிலைப்பாடு. அப்படியே நினைக்கப்பட்டாலும் கோட்சேயின், சாவர்க்கரின், ஆர்எஸ்எஸ்சின், ஜனசங்கத்தின் பார்வையில் காந்தி நினைக்கப் பட வேண்டும். அதாவது இந்தியாவின் விரோதி யாக காந்தியை முன்நிறுத்த வேண்டும்.
திரும்பத் திரும்ப அமித்ஷா கடிதம்
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அமித்ஷா மூலம் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கடிதம் வந்துகொண்டே இருக்கிறது. தற்பொழுதுள்ள நாடாளுமன்ற கட்டிடம் அப்படியே இருக்க வேண்டுமா அல்லது மாற்றி அமைக்கப்பட வேண்டுமா என திரும்பத்திரும்ப கேட்டுக் கொண்டே இருக்கிறார்கள். அப்படி என்ன அவ ரசம்? நாடாளுமன்ற வளாகத்தின் முகப்பில் உள்ள காந்தியின் உருவம் இவர்களை உறுத்திக்கொண்டே இருக்கிறது. இந்த கட்டி டத்தில்தான் அரசியல் சாசன சட்ட அரங்கேறி யது என்பது ஒரு குறியீடு. இந்தக் கட்டிடத்தில் அவர்களால் மனமொத்து உட்காரவே முடிய வில்லை.
தாங்கள் சிந்தனையால், செயலால் வேறுபட்டவர்கள் என்பதை காட்டிக்கொள்ள விரும்புகிறார்கள். சாவர்க்கருக்கு பாரதரத்னா விருது கொடுக்க வேண்டும் என்கிறார்கள். கோட்சேயின் தத்துவத் தலைமையே சாவர்க்கர் தான். சாவர்க்கரா? காந்தியா? என்றால் தயக்கமே இல்லாமல் சாவர்க்கர்தான் இவர்களின் தேர்வு. கடந்த நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் 32 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டம் நடந்த 48 நாளில் ஒரு மணி நேரம்கூட அவை ஒத்திவைக்கப்படவில்லை. அப்படியென்றால் எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைக்கவில்லையா? குரல் எழுப்ப வில்லையா? ஒத்தி வைக்கும் அள வுக்கு முக்கியமான மசோதாக்கள் நிறை வேற்றப்படவில்லையா? தொடர்ச்சியாக 4 மணி நேரத்திற்கும் மேலாக தொண்டைத்தண்ணி வத்தும் அளவுக்கு தொடர்ச்சியாக முழக்கங்கள் எழுப்பிக்கொண்டே இருந்தோம். ஒரு மணி நேரம் அல்லது பத்து நிமிடம்கூட அவை ஒத்தி வைக்கப்படவில்லை. நாடாளுமன்ற மரபை காலில் போட்டு மிதிப்பதில் இவர்களுக்கு எந்தத் தயக்கமும் இல்லை. ஜனநாயகம் அணு அணு வாக சாகடிக்கப்படுகிறது.
காந்தியின் ராமரும் இவர்களின் ராமரும்
உண்மையில் இது யாருக்கான இந்தியா? இவ்வளவு அப்பட்டமான சீரழிவுவாதிகளால் காந்தியின் நிழலைக்கூட நெருங்க முடியாது. நாத்திகர்களையோ மற்றவர்களையோவிட காந்தி ஏன் இவர்களை ஏன் ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை. ஏனென்றால் இவர்களின் உண்மையான தோலை ஆன்மீகத்தை வைத்தே உரித்து மக்களுக்குக் காட்டியவர் காந்தி. காந்தி மீண்டும் மீண்டும் உச்சரித்துக்கொண்டு இருந்த ராமர் வேறு. இவர்களின் ராமர் வேறு. சமுதாயத்தின் சமவெளியை குலைக்கிற, மதவெறியை ஊட்டுகிற ஒன்றுமைக்கு எதிரான அரசியலைத் தூவுகிற வேலையை இவர்கள் செய்துகொண்டே இருந்தார்கள். செய்து கொண்டே இருக்கிறார்கள். வெறுப்பு அரசி யலை தூவுகிற போதெல்லாம் அதை அணைப் பதுதான் எனது ஆன்மீகம் என்று செயல்பட்டவர் காந்தி. அதுதான் இந்தியா, பாகிஸ்தான் பிரி வினைக்கு எதிராக காந்தியை நிற்க வைத்தது. ஒற்றை மனிதராக உள்ளே நுழைய முடிந்தது. அவரின் அன்பின் அரசியல்தான் அந்தத் தைரி யத்தைக் கொடுத்தது.
இவர்களுக்கு மூலதனமாக இருப்பது வெறுப்பு அரசியல். எனவேதான் அன்பின் அர சியலை சிதைத்து உருக்குலையச் செய்கிறார் கள். நீங்கள் எதை பொது வெளியில் பேசி னாலும் அதற்கு எதிராக 38 லட்சம் பேரை சமூக வலைத்தளத்தில் அவர்கள் பயன்படுத்து கிறார்கள். இந்தப் பின்னணியில்தான் காந்தி யத்தின் சிந்தனைகள் இன்றைக்கும் தேவையாக இருக்கிறது. இன்றைக்கு பாசிசம் தலைதூக்கி யுள்ள நிலையில் காந்தியை மேலும் மேலும் உயர்த்திப் பிடிப்போம். இவ்வாறு சு.வெங்க டேசன் பேசினார். கருத்தரங்கிற்கு சிபிஎம் மாவட்டச் செயலா ளர் எஸ்.கவிவர்மன் தலைமை வகித்தார். தமு எகச மாவட்டச் செயலாளர் சு.மதியழகன் வர வேற்றார். மக்கள் ஒற்றுமை மேடை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் நா.முத்துநிலவன் தொடக்க வுரையாற்றினார். போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கி சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில துணைத் தலைவர் எம்.சின்னத்துரை ஆகியோர் பாராட்டுரை வழங்கினார்.
திலகவதியார் திருவருள் ஆதினம் தயா னந்த சந்திரசேகரன், ஜமாத் உலமா மாவட்டத் தலைவர் மௌலானா எஸ்.சதக்கத்துலா உலவி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். கவிதை ஓவியக் கண்காட்சியை கவிஞர் தங்கம்மூர்த்தி திறந்து வைத்தார். எம்.ஏ.ரகுமான் நன்றி கூறி னார். புதுகை பிலிம் சொசைட்டி சார்பில் திரை யிடல் நிகழ்ச்சியும், பஷீர் அலியின் நாணய வியல் கண்காட்சியும், ஆலங்குடி விழுதுகள், எஸ்எப்ஐ அரும்புகள் குழுவினரின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. நிகழ்ச்சியில் ஏராளமானோர் பங்கேற்றனர்.