திருவண்ணாமலை, ஜூலை 23- 8 வழி சாலை திட்டத்தை கைவிட வலியுறுத்தி திரு வண்ணாமலை மாவட்டத்தில் 100 மையங்களில் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 8 வழி சாலை எதிர்ப்பு இயக்க கூட்டமைப்பு, தமிழ்நாடு விவ சாயிகள் சங்கத்தின் சார்பில், உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள 8 வழி சாலை மேல்முறையீட்டு வழக்கினை மத்திய, மாநில அரசுகள் வாபஸ் பெற வலியுறுத்தி கவன ஈர்ப்பு நூதன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விவசாயிகள் தங்கள் நிலங்களில் இறங்கி கருப்புக் கொடியுடனும், சில இடங்களில் தங்களிடம் பறிக்கப்பட்ட நிலங்களை திரும்ப வழங்கக் கோரி மத்திய மாநில அரசுகளிடம் மடியேந்தியும் ஆர்ப்பட் டத்தில் ஈடுபட்டனர். 8 வழிச்சாலைக்கு எதிராக கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றக் கோரி ஊராட்சி மன்ற தலை வரிடம் மனு அளித்தனர். இதில் எட்டு வழிச்சாலை எதிர்ப்பு இயக்க கூட்ட மைப்பின் ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் எஸ். அபிராமன், துணை ஒருங்கிணைப்பாளர் இல.அழ கேசன் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான விவசாயி கள் கலந்து கொண்டனர்.