tamilnadu

img

இன்று மாலைக்குள் ஃபானி புயல் : வானிலை ஆய்வு மையம்

நேற்று தென்கிழக்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த மண்டலம் இன்று அடர்ந்த காற்றழுத்தமண்டலமாக மாறியுள்ளது. 

காற்றழுத்த தாழ்வு மண்டலமானது மணிக்கு 18 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருவதாகவும், கரையிலிருந்து 1180 கி.மீ தென்கிழக்கே நிலை கொண்டுள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

வரும் 30ம் தேதி வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர கடலோர பகுதியை புயல் அடையும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இன்று மாலைக்குள் இது புயலாகவும் நாளை தீவிர புயலாகவும் மாறும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

;