tamilnadu

தூக்கிட்டு ஒருவர் தற்கொலை

தூத்துக்குடி, ஜூன் 9- கோவில்பட்டி அருகே நோயால் அவதிப்பட்டு வந்த மின்வாரிய ஊழியர் சனியன்று தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.  தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை அடுத்த பாண்டவர்மங்கலம் சண்முகசிகாமணி நகரைச் சேர்ந்த வர் ராமகிருஷ்ணன் மகன் முருகேசன் (48). இவர் கோவில் பட்டி மின்வாரிய அலுவலகத்தில் போர்மேனாக பணியாற்றி வந்தார். கடந்த 2 ஆண்டுகளாக நீரிழிவு நோயால் அவ திப்பட்டுவந்த முருகேசன் கடந்த 20 நாள்களாக மருத்துவ விடுப்பில் இருந்தாராம். இந்நிலையில் விடுப்பு முடிந்து வெள்ளியன்று பணியில் சேர்ந்த இவர் சனிக்கிழமை காலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மேற்கு காவல் நிலைய போலீசார் சடலத்தைக் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.