சென்னை,டிச.17- அரையாண்டுத் தேர்வு விடைத்தாள்களை மதிப் பீடு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் தவறு இழைத்தால் அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளி களில் நடைபெற்று வரும் அரையாண்டுத் தேர்வுகள் வரும் 23 ஆம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலை யில் விடைத்தாள்கள் திருத்தும் பணி நடை பெற்று வருகிறது. இந்நிலையில், விடைத்தாள்களை திருத்தும் ஆசிரியர்கள் கவனமுடன் சரியாக மதிப்பீடு செய்ய வேண்டும் என்றும், மதிப்பீடு செய்யப்பட்ட விடைத் தாள்கள் பிற ஆசிரியர்களைக் கொண்டு மறுக்கூட் டல் செய்ய வேண்டுமெனவும் பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. மேலும், மதிப்பீடு பணியை சரியாக செய்யாத ஆசிரியர்கள் மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்கவும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.