tamilnadu

img

காவல்துறையினர், தூய்மைப் பணியாளர்களுக்கு திருமலா இலவச பால் விநியோகம்

சென்னை, மார்ச்  31- கொரோனா வைரஸ் தொற்றை எதிர்த்து  வீரச்சமர்புரிந்து வரும் மருத்து வர்கள், காவல்துறையினர், தூய்மைப் பணியாளர்கள் ஆகியோருக்கு திருமலா பால் நிறுவனம் இலவசமாக பால் வழங்கி வருகிறது.

நாட்டு மக்களை பாதுகாக்க தங்க ளது உயிரையும் பொருட்படுத்தாமல்  பணிபுரியும் காவல்துறையினர், போக்கு வரத்து காவல்துறையினர்,தூய்மைப்பணியாளர்கள், கழிவுப்பொருட்களை அகற்றுவோர்,சமூக சேவகர்கள்  ஆகி யோர் நமது சமூகம் சுகாதாரமாகவும் இருக்கவும் நோய் தொற்று பரவாமல் தடுக்கவும்  அயராது பணியாற்றி வரு கிறார்கள். ஊரடங்கு உத்தரவால் இவர்களுக்கு அடிப்படைத் தேவையான பால் கிடைக்கா மல் இருக்கக்கூடாது என்பதற்காக  திரு மலா பால் நிறுவனம்  பால் பொருட்களை இலவசமாக வழங்குவதாக நிறுவனத்தின் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.