ஊரடங்க மற்றும் கொரோனா நோய் தொற்றிலிருந்து மக்களை பாதுகாக்க வலியுறுத்தி 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அக.20-26 மக்கள் சந்திப்பு இயக்கத்தை நடத்தி வருகிறது. இதனையொட்டி சென்னையில் பல பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. மயிலாப்பூர் பகுதி, 173 வது வட்ட கிளை சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஜெயசந்திரன் தலைமை தாங்கினர். தென்சென்னை மாவட்டச் செயற்குழு உறப்பினர் எஸ். குமார், மாவட்ட குழு உறுப்பினர் எம்.சரஸ்வதி, பகுதிக்குழு உறுப்பினர் விஜயா உள்ளிட்டோர் பேசினர்.
மத்திய சென்னை மாவட்டம், எழும்பூர் பகுதி சேத்பட் கிளைகள் சார்பில், கிளைச் செயலாளர் மு.அன்பு தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பகுதிச் செயலாளர் கே.முருகன், மாவட்டகுழு உறுப்பினர் ஏ.ஆறுமுகம், பகுதிக்குழ தோழர்கள் பி.ஸ்ரீகாந்த் பி.கே.மூர்த்தி. ஜி.கார்திக், ஐ.வெங்கடேசன் உள்ளிட்டோர் பேசினர்.
ஊரடங்கு மற்றும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்தி வரும் மக்கள் கோரிக்கை பிரச்சார இயக்கத்தின் ஒருபகுதியாக கடலூர் மாவட்டச் செயலாளர் டி.ஆறுமுகம் விருத்தாசலத்தில் துண்டு பிரசுர பிரச்சாரத்தை துவக்கி வைத்தார். இதில் வட்டச் செயலாளர் என்.எஸ்.அசோகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.