tamilnadu

img

அரசுப் பள்ளிகளை பாதுகாத்திடுக! நீட் தேர்வை ரத்து செய்க!

மதுரை, மே 29 - ஆரம்பக் கல்வி முதல் ஆராய்ச்சிக் கல்வி வரை அறிவியல் பூர்வமான கல்வியை அரசு வழங்க வேண்டும்;  பள்ளிக் கல்விக்காக ரூபாய் 28 ஆயிரம்கோடி ஒதுக்கியுள்ளதாகக் கூறும் தமிழக அரசு அரசுப் பள்ளிகளை தனி யாருக்கு தாரைவார்ப்பதை நிறுத்தவேண்டும்; அரசுக்கல்வி நிலையங் களைப் பாதுகாக்க வேண்டும்; ஆதிதிராவிடர், பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு வழங்க வேண்டிய கல்வி உதவித் தொகை ரூ. 14 ஆயிரம்கோடியை உடனடியாக வழங்க வேண்டும்; நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்; மாணவர்களுக்கு பஸ் பாஸ், லேப்டாப், மிதிவண்டி, கல்வி உதவித்தொகை ஆகியவற்றை கல்வியாண்டின் துவக்கத்திலேயே வழங்கவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தியமாணவர் சங்கத்தினர் தமிழகம் முழுவதும் சைக்கிள் பிரச்சாரம் மே25-ஆம் தேதி முதல் மேற்கொண்டுள்ளனர். சென்னை, கடலூர், கோவை கன்னியாகுமரி ஆகிய இடங்களிலிருந்து லிருந்து புறப்பட்டுள்ள இந்தப்பய ணக்குழுக்கள் மே 31-ஆம்  தேதிதிருச்சிராப்பள்ளியில் சங்கமிக்கின்றன. கன்னியாகுமரியில் இருந்து மாநிலத்தலைவர் ஏ.டி.கண்ணன் தலைமையிலான பயணக்குழுவில் மத்தியகுழு உறுப்பினர் சத்யா,மாநிலச் செயற்குழு  உறுப்பினர்காவ்யா உட்பட 65-க்கும் மேற்பட் டோர் இடம்பெற்றுள்ளனர். பயணக்குழுவிற்கு தே.கல்லுப்பட்டி, திருமங்கலம் திருநகர், பைகாரா,ஜெய்ஹிந்த்புரம், மேலப்பொன்ன கரம், மத்தியப்பகுதிக்குழு, முனிச்சாலை, செல்லூர் ஆகிய பகுதிக்குழுக்கள் ஆகிய இடங்களில் இந்திய மாணவர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், அனைந்திய ஜனநாயக மாதர் சங்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம்,தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்,ஆகியவற்றின் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

குமரி முதல் திருச்சி நோக்கி செல்லும் இந்திய மாணவர் சங்கத்தின் பயணக்குழுவிற்கு மதுரையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மதுரையிலிருந்து புறப்படும் போது சைக்கிள் பயணத்தின் நினைவாக மாணவர்கள் மரக்கன்றுகளை நட்டனர்.இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாநிலச் செயலாளர் எஸ். பாலா உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.

பயணக்குழுவின் பிரச்சாரத்தின் மதுரையில் கொடியசைத்து துவக்கி வைத்தார்    மாணவர் சங்க முன்னாள் மாநிலச் செயலாளர் ஜி.செல்வா