tamilnadu

img

கேரள அரசின் ஒப்புதலுக்குப் பின் ஆழியாற்றில் தடுப்பணை

சென்னை, ஜூலை 17- தமிழக சட்டப்பேரவையில் புதனன்று (ஜூலை17) நேரமில்லா நேரத்தில் சிறப்பு கவன  ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசிய பேரவை  துணைத் தலைவர் பொள்ளாச்சி வி. ஜெயராமன்,  “ஆழியாறு ஆற்றில் மணக்கடவு வரை 3 இடங்களில்  தடுப்பணை கட்டி நீரை தேக்க நடவடிக்கை எடுக்க  வேண்டும்” என்றார். இதற்கு பதிலளித்து பேசிய தமிழக முதல மைச்சர் எடப்பாடி பழனிசாமி, “பொள்ளாச்சி, வால்பாறை, கிணத்துக்கடவு ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் பரம்பிக்குளம் ஆழியாறு திட்ட  நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தண்ணீர் வீணாவதை  தடுக்க கூடுதல் தடுப்பணைகள் கட்டுவதற்கு  கருத்துக்களுக்கு மதிப்பீடுகள் தயாரிக்கப் பட்டுள்ளது” என்றார். ஆழியாறு ஆற்றில் மணக்கடவு வரை 3 இடங்க ளில் தடுப்பணை கள் கட்டி நீரைத் தேக்குவது தொடர்பான கருத்துருக்கள் கேரள மாநில அர சோடு பேசி ஒப்புதல் பெறப்பட்டபின் மேல்நட வடிக்கை எடுக்கப்படும் எனவும் முதலமைச்சர் கூறினார்.