சென்னை, மார்ச் 25- ஆதிதிராவிடர் நலத் துறைப் பள்ளிகள் தரம் உயர்த்தப்ப டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேர வையில் அறிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவை விதி 110-ன் கீழ் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை குறித்து புதிய அறிவிப்புகளை வெளியிட்டு பேசுகையில்,“ ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாண வர்களின் நலனைக் கருத்தில்கொண்டு, 6 தொடக்கப் பள்ளி கள் நடுநிலைப் பள்ளிகளாகவும், 5 நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாகவும், 17 உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாகவும் நிலை உயர்த்தப்படும்”என்றார்.
பழங்குடியின மக்களின் வாழ்வாதாரத்தினை உயர்த்தும் வகையில், இளைஞர்களுக்கான சுய வேலைவாய்ப்பு, தொழில்முனைவோர், நில மேம்பாட்டுத் திட்டம், சுய உதவிக் குழு பொருளாதார மேம்பாட்டுத் திட்டம் போன்ற திட்டங்கள் ரூ. 10 கோடியில் தாட்கோ மூலம் செயல்படுத்தப்படும். 10 ஆண்டுகளுக்கு மேலான, 80 ஆதிதிராவிடர் நல விடுதி கள், 20 பழங்குடியினர் நல விடுதிகளில் கூடுதல் கழிவறைகள், குளியலறைகள், மின் சாதனங்கள் போன்ற அடிப்படை வசதி கள் தலா 20 லட்சம் ரூபாய் வீதம் மொத்தம் 20 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்படும் என்றும் முதலமைச்சர் கூறி னார். தற்போதுள்ள விலைவாசியை கருத்தில்கொண்டு, ஆதிதிராவிடர் குடும்பங்களில் ஏற்படும் இறப்பிற்கு ஈமச் சடங்கிற்காக வழங்கப்பட்டு வரும் நிதியுதவி, ரூ. 2,500லிருந்து ஐந்தாயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். ஆதிதிரா விட மக்கள் தங்கள் வீட்டு சுப நிகழ்ச்சிகளைக் கொண்டா டும் வகையில் அனைத்து வசதிகளுடன் கூடிய 24 சமுதாயக் கூடங்கள் ரூ. 14.49 கோடியில் கட்டப்படும் என்றும் முதல்வர் தெரிவித்தார்.