tamilnadu

img

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தோழர் கே.வரதராஜன் உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள தோழர் கே.வரதராஜன் உருவப்படத்திற்கு சோசலிஸ்ட் யூனிட்டி சென்டர் ஆப் இந்தியா (கம்யூனிஸ்ட்)  மாநிலச் செயலாளர் ஏ.ரங்கசாமி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினார்.

**********************

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் தோழர் கே.வரதராசன் மறைவையொட்டி அவரது உருவப்படத்திற்கு ஆயிரம் விளக்கு பகுதிகுழு சார்பில் ஞாயிறன்று (மே 17)புஷ்பாநகரில் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது. மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா, செயற்குழு உறுப்பினர்கள் சி.திருவேட்டை, இ.சர்வேஸ்வரன், எஸ்.கே.முருகேஷ், வெ.தனலஷ்மி, பகுதிச் செயலாளர்.அ.இரணியன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

**********************

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் கே.வரதராசன் மறைவையொட்டிஉருவப் படத்திற்கு அம்பத்தூரில் பகுதிச் செயலாளர் சு.பால்சாமி தலைமையில் மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. மாவட்டக் குழு உறுப்பினர்கள் சு.லெனின்சுந்தர், கே.ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

**********************

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் மறைந்த தோழர் கே.வரதராசன் உருவப்படத்திற்கு வில்லிவாக்கம் பகுதிச் செயலாளர் எம்.ஆர்.மதியழகன், எழுத்தாளர் ராமசந்திரவைத்தியநாத் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

**********************

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினரும், விவசாயிகள் இயக்கத்தின் மூத்த தலைவருமான தோழர் கே.வரதராசன் மறைவையொட்டி  ஜவான் பவன் அருகில் சிபிஎம் கடலூர் நகர செயலாளர் ஆர்.அமர்நாத் தலைமையில் இரங்கல் கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வில் மாநில குழு உறுப்பினர் கோ .மாதவன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம்.மருதவானன், பி.கருப்பையன், மாவட்ட குழு உறுப்பினர்கள் ஆர்.ஆளவந்தார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

**********************

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் தோழர் கே.வரதராசன் மறைவையொட்டி விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் வட்டச் செயலாளர் முத்துவேல் தலைமையில் அஞ்சலி செலுத்தப்பட்டது. மாவட்ட செயற்குழு சு. வேல்மாறன். மாவட்டக்குழு  வி.உதயகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

**********************

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு முன்னாள் உறுப்பினரும், அகில இந்திய விவசாயிகள்  சங்கத்தின் முன்னாள் செயலாளருமான தோழர் கே.வரதராஜன் உருவப்படத்திற்கு சிபிஎம் காஞ்சிபுரம் நகர குழு  சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது. நகர செயலாளர் சி.சங்கர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் இ.முத்துக்குமார், மாவட்டக்குழு உறுப்பினர் ஏ.வாசுதேவன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

**********************

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் கே.வரதராசன் மறைவையொட்டி திருண்ணாமலை அறிவொளி பூங்கா அருகே இரங்கல் கூட்டம் நடைபெற்து. சிபிஎம் மாவட்டச் செயலாளர் எம்.சிவக்குமார், செயற்குழு உறுப்பினர்கள் எம்.வீரபத்திரன், எம்.பிரகலநாதன், எஸ்.ராமதாஸ், சிபிஐ மாவட்டச் செயலாளர் முத்தையன், நிர்வாகிகள் கே.ஜோதி, இரா.தங்கராஜ் உள்ளிட்டோர் இரங்கல் உரையாற்றினர்,

**********************

;