tamilnadu

img

தோழர் எஸ்.கண்ணனின் அவர்களின் தந்தை காலமானார்...

இராஜபாளையம்:
இராஜபாளையம் சுரைக்காய்பட்டியைச் சேர்ந்த வி.சவுந்தரராஜன் (வயது 80), ஞாயிறன்று அதிகாலை காலமானார். இவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினரும், சிஐடியு மாநில துணை பொதுச் செயலாளருமான எஸ்.கண்ணனின் தந்தை ஆவார்.

சுரைக்காய்பட்டியில் உள்ள அவரது இல்லத்தில் நடந்த இறுதி நிகழ்ச்சியில் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் எம்.என்.எஸ்.வெங்கட்டராமன், மாவட்டச் செயலாளர் கே.அர்ச்சுணன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம்.தாமஸ்,அ.குருசாமி, நகரச் செயலாளர் மாரியப்பன், அருப்புக்கோட்டை நகரச் செயலாளர்காத்தமுத்து, வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் பாரத், திருப்பூர் மாவட்டச் செயலாளர்மணிகண்டன், மாணவர் சங்கத் தலைவர் பிரசாந்த் உள்ளிட்டோர், அவரது உட
லுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

வி.சவுந்தரராஜன் மறைவு செய்திஅறிந்து, எஸ்.கண்ணனை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு கட்சியின் முதுபெரும் தலைவர் என்.சங்கரய்யா, அரசியல்தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மாநிலச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மத்திய குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன், சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன், மாநில பொதுச் செயலாளர்ஜி.சுகுமாறன், மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.ஏ.பெருமாள் மற்றும் மாநில செயற்குழு, மாநிலக் குழு உறுப்பினர்கள் தங்களது இரங்கலை தெரிவித்தனர்.

;