நாகர்கோவில், ஏப்.29- கன்னியாகுமரி மாவட்ட சிஐடியு தலைவர், மில் தொழிலாளர் சங்கம், போக்குவரத்து தொழிலாளர் சங்க தலைவர் என பல பொறுப்புகளை நிறை வேற்றியவர். தோட்டம் தொழிலாளர் களின் மதிப்பு மிகு தலைவர் தோழர் பி. பெருமாள் அவர்களின் 19ஆவது நினைவு தினம் புதனன்று கடைப்பிடிக் கப்பட்டது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு அலுவலகத்தில் பி.பெரு மாளின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. நிகழ்வில் சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் என்.முருகேசன், உஷா பாஸி, மாவட்டக்குழு உறுப்பினர் மலைவிளை பாசி, ஜெயராஜ் ஆகியோர் பங்கேற்றனர்.
கிருஷ்ணன்கோவிலில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம் அகமது உசேன், மாவட்டக்குழு உறுப்பினர் எஸ். அந்தோணி, வட்டார செயலாளர் கே. மோகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.