tamilnadu

img

தோழர் இ.எம்.செய்யது முகம்மது காலமானார்

தென்காசி:
தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் பீடித் தொழிலாளர் சங்க மூத்த தலைவர்தோழர் செய்யது முஹமது காலமானார்.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தென்காசி மாவட்டம் செங்கோட்டை தாலுகா வடகரை நகரத்தில் முதுபெரும் தோழராகவும், மாவட்ட பீடி தொழிலாளர் சங்கத்தை  ம.தோழர் ராஜாங்கத்துடன் இணைந்து பீடி தொழிலாளர் பிரச்சனையில் தலையிட்டு தீர்வு கண்டவர். இவர்ஏற்கனவே செயல்பட்டு வந்த அண்ணா பீடி தொழிலாளர் சங்கத்தை சிஐடியு பீடிதொழிலாளர் சங்கத்துடன் இணைந்து சங்க வளர்ச்சிக்காகவும், பீடி தொழிலாளர்களுக்காகவும் பாடுபட்ட கட்சி தொழிற்சங்க விசுவாசம் மிக்க ஒரு அற்புதமான தோழர்.  அண்மையில் ஆகஸ்ட் 27-ல் நடைபெற்ற கட்சியின் போராட்டத்தில் இந்தியாவை பாதுகாப்போம் இந்திய மக்களை பாதுகாப்போம் என்று உற்சாகமாக கோஷம் எழுப்பி மத்திய அரசுக்கு எதிராக நடந்த போராட்டத்தில் பங்கேற்ற தோழர் இ.எம்.செய்யது முகம்மது செங்கோட்டையில் அவரது இல்லத்தில் செவ்வாய்க்கிழமை அன்று காலமானார். 
அவரது மறைவுக்கு சிஐடியு திருநெல்வேலி, தென்காசி மாவட்ட குழுவின் சார்பாகவும்,மாவட்ட பீடி தொழிலாளர் சங்கம் சார்பாக வும் ஆழ்ந்த இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

;