சென்னை, பிப். 5- நாடோடிகள் உள் ளிட்ட பல படங்களில் நடித் துள்ள குணச்சித்திர நடி கர் கே.கே.பி. கோபால கிருஷ்ணன் புதனன்று (பிப்.5) காலமானார். அவருக்கு வயது 54. 2009ஆம் ஆண்டு சமுத்திரக்கனி - சசிகுமார் கூட்டணியில் வெளிவந்த படம் - நாடோடிகள். விமர்சன ரீதி யாகவும், வசூல் ரீதியாகவும் இப்படத்துக்கு பரவலான வரவேற்புகள் கிடைத்தன. இந்தப் படத்தில் நடிகை அனன்யாவின் தந்தையாக, சசிகுமார் - அனன்யா காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வேடத்தில் நடித்து கவனம் பெற்றார் கோபாலகிருஷ்ணன். இந்நிலையில் உடல்நலக்குறைவால் ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனை யில் கோபாலகிருஷ்ணன் அனுமதிக்கப் பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி கால மானார். கோபாலகிருஷ்ணனின் மறை வுக்கு தமிழ்த் திரையுலகக் கலைஞர்கள் இரங்கல் தெரிவித்துள்ளார்கள்.