tamilnadu

img

ஓபிசி மாணவர்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு அளிக்க கோரும் வழக்கு

உச்சநீதிமன்றத்தில் சிபிஎம் கேவியட் மனு

சென்னை, ஆக.8- மருத்துவ படிப்பில் ஓ.பி.சி. மாணவர்களுக்கு 50 சதவிகிதம் இட ஒதுக்கீடு அளிக்க கோரிய வழக்கில் உச்சநீதிமன்றத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேவியட் மனு தாக்கல் செய்துள் ளது. இதுதொடர்பாக கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பால கிருஷ்ணன் விடுத்துள்ள செய்தி வருமாறு: மருத்துவப் படிப்பில் அகில இந்திய தொகுப்புக்கான இடங் களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பின ருக்கு 50 சதமான இடஒதுக்கீடு அளிக்க வேண்டுமென உச்சநீதி மன்றத்திலும், அடுத்து உயர்நீதி மன்றத்திலும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பில் வழக்கு பதிவு செய்திருந்தோம்.  திமுக உள்ளிட்ட கட்சிகளும், தமிழக அர சின் சார்பிலும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. 

சென்னை, உயர்நீதிமன்றம் இவ்வழக்கில் 27.7.2020 அன்று தீர்ப்பு வழங்கியது. அத்தீர்ப்பில் ஓ.பி.சி. மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக மத்திய அரசு, மருத்துவ கவுன்சி லின் செயலாளர், பல்மருத்துவ கல்வி இயக்குநர், தமிழக சுகா தாரத்துறை செயலாளர் ஆகிய மூவரைக் கொண்ட குழு அமைத்து மூன்று மாதத்திற்குள் முடி வெடுக்க வேண்டுமென உத்தர விட்டது.  இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வேறுயாரும் தடை யாணை பெறாமல் இருப்ப தற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் உச்சநீதி மன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இம்மனு வினை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மூத்த வழக்கறி ஞர் சுரேந்திர நாத் அவர்கள் தாக் கல் செய்துள்ளார் என்பதை தெரி வித்துக் கொள்கிறோம். இவ் வாறு அவர் அதில் கூறியுள்ளார்.