சென்னை,பிப்.13- 10,11,12 ஆம் வகுப்பு வினாத்தாள் பாதுகாப்பு மையங்களில் கண்காணி ப்பு கேமிரா கட்டாயமாக இருக்க வேண்டும் என்று தேர்வுத்துறை அறி வித்துள்ளது. பொதுத் தேர்வுகள் மார்ச் 2ஆம் தேதி துவங்கி ஏப்ரல் 13 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த தேர்வு க்கான வழிகாட்டு நெறிமுறைகளை அரசு தேர்வுத்துறை வெளி யிட்டுள்ளது. அதில், வினாத்தாள் மையங்களை அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து, பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். வினாத்தாள் பாது காப்பு மையங்களில், கட்டாயம் கண்காணிப்பு கேமிரா பொருத்தப்பட்டு செயல்பாட்டில் இருப்பதுடன், அங்கு தனி காவலரை பணியமர்த்தவேண்டும். தேர்வு மையங்களாக செயல்படும் பள்ளிகளில் எவ்வித கட்டுமானப் பணிகளும் நடைபெறாமல் இருக்க வேண்டும் என்று தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.