tamilnadu

img

எல்லா போராட்டங்கள் போதும் தமிழக அரசு அத்திவரதர் போல படுத்துக்கிடக்க முடியாது

திண்டுக்கல். ஆக. 17- எல்லா போராட்டங்களின் போதும்  தமிழக அரசு அத்திவரதர் போல படுத்தே கிடக்க முடியாது. எழுந்து நின்று நமது கோரிக்கையை ஏற்கும் காலம் வரும் என்று சிஐடியு மாநி லத்தலைவர் அ.சவுந்தரராசன் குறிப்பிட்டார். திண்டுக்கல்லில் அரசு  போக்குவரத்து ஓய்வூதியர் சம்மேளன  மாநில மாநாட்டில் கலந்து கொண்டு அவர் வாழ்த்தி பேசியதாவது: நாட்டில் பென்சன் பிரச்சனை தான்  பிற்காலத்தில் மிகப் பெரிய பிரச்சனை யாக உருவெடுக்கும். இன்றைக்கு வேலை செய்பவர்கள் நாளை ஓய்வூதி யர்களாக மாறுவார்கள். நீங்கள் மட்டும் தனியாக போராடி வெற்றி பெற  இயலாது. எனவே தற்போது பணியாற்  றும் தொழிலாளர்களோடு இணைந்து போராடினால் தான் வெற்றி கிடைக்  கும். போராடிக்கொண்டே இருக்கி றோம். அடுத்த இலக்கு என்ன? 2003க்கு  பிறகு பணியில் சேர்ந்த தொழிலாளர்க ளுக்கு புதிய பென்சன் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

நீங்கள் ஓய்வு பெற்று இந்த திட்டத்திலிருந்து தப்பித் துக்கொண்டு விட்டீர்கள். இந்த திட்டத்தில் சேர்ந்த தொழிலாளர்கள் சிலர் பணி செய்து கொண்டிருக்கும் போது இடைக்காலத்தில் இறந்து  விடுகிறார்கள். இந்த தொழிலாளர்க ளின் பென்சனுக்கு என்ன தீர்வு சொல்லப் போகிறது அரசு. சிஐடியு இது  தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது. இந்த வழக்கில் நாம்  வெற்றி பெறுவோம். அரசு துறையை  தனியார்மயமாக்க வெறிபிடித்து அலைகிறார்கள். நீதிபதி கிருபாகரன் போன்றவர்கள் அரசு போக்குவரத்துத் துறை ஏன் தனியார்மயமாகக்கூடாது என்று கேள்வி எழுப்புகிறார்கள். போக்குவரத்து துறையில் பெரும்பால னவர்களுக்கு 8 மணி நேர வேலை உத்தரவாதம் இல்லை. 11 மணி நேரம்,  12 மணி நேரம் வரை வேலை செய்கி றார்கள். இதெல்லாம் நீதிபதிகளுக்கு  தெரியுமா? நாம் நடத்துகிற போராட்டத்  திற்கு எப்போதும் அத்திவரதர் போல  அரசு படுத்துக்கொண்டே கண்டு கொள்ளாமல் இருக்க முடியாது. எழுந்து நிற்கவும் வைப்போம். தொழி லாளர்களுடைய ஜாதகம் போராட்ட ஜாதகம் தான். 12 ராசிகளும் போராட்ட  ராசிகள் தான். 

மெட்ரோ ரயில்வேயில் சங்கம்  துவங்கப்பட்டது. இங்கு சங்கம் வைக்கக்கூடாது என்றார்கள். ஏன் என்றால் இந்த தொழிலாளர்கள் தொழி லாளர்களே இல்லை என்கிறார்கள். சங்கம் வைப்பதற்கான போராட்டம் ஒரு புறம் நடந்து கொண்டிருக்கிறது. இனிமேல் எல்லா துறைகளும் தனி யார்மயமாக்க வேண்டும் என்ற நோக்  கில் மத்திய மாநில அரசுகள் செயல் பட்டுக்கொண்டிருக்கின்றன. 

மத்திய அரசு கொண்டு வந்துள்ள மோட்டார் வாகனச் சட்டத்தால் மோட்  டார் வாகனத் தொழிலில் ஈடு பட்டுள்ள 7 கோடி குடும்பங்கள் கடும்  பாதிப்புக்குள்ளாகி உள்ளன. அதற் காக நாம் பீதியடையவேண்டிய அவசி யம் இல்லை. முறியடித்து முன்னேறு வோம். தொழிலாளர் நலச் சட்டங்களை  மோடி  அரசு திருத்துகிறது. ஒரு நாள்  இந்த தொழிலாளி வர்க்கத்தை பகைத்  துக்கொண்டதால் ஆட்சியே பறி போனதாக தலை தலையாக மோடி யும், அமித்ஷாவும் அடித்துகொள்ளப் போகிற காலம் வரும்.  தொழிலாளர்கள் மீதும் நடை பெறும் இத்தகைய தாக்குதலுக்கு  எதிராக சிஐடியு அகில இந்திய தலை வர்கள் பல்வேறு போராட்டங்களுக்கு திட்டமிட்டுள்ளார்கள். பென்சன் தாரர்களில் பல்வேறு வகையான பென்  சன்தாரர்கள் உள்ளனர். ஒரு வயது  குழந்தை போல தான் 80 வயது முதி யவர்களும். அவர்களை பாதுகாக்க இந்த அரசு என்ன நடவடிக்கை எடுக்கப்  போகிறது. முறைசாரா தொழிலாளர்க ளாக இருப்பவர்களில் பெரும்பாலான வர்களுக்கு பென்சன் கிடைக்க வில்லை. கிராமப்புறங்களில் வசிக்கும்  முதியோர்களுக்கு பென்சன் கிடைக்க வில்லை. 

முதன்முதலில் அனைவருக்கு மான பென்சன் திட்டத்தை கொண்டு வந்தது சோவியத் யூனியன் தான்.  தொட்டில் முதல் சுடுகாடு வரை ஒவ்வொரு குடிமகனுக்கும் அனைத்து  வசதிகளையும் செய்து கொடுப்பது அரசின் கடமை என்று சோவியத் நாட்டில் அரசியல் சட்டம் சொன்னது.  நமது அரசியல் சாசனம் சொல்கி றதா? அனைவருக்குமான அரசியல்  பாதுகாப்பை உறுதி செய்வது நமது  அரசின் கடமையாகும். வெளிநாடு களில் தேர்தல் வாக்குறுதிகளாக சமூக  பாதுகாப்பை கைவிடமாட்டேன் என்றும், பென்சன் வழங்குவேன் என்  றும் பிரச்சாரம் செய்கிறார்கள். பென்  சன் பணத்தில் அந்த அரசுகள்  கை  வைக்க தயங்குகின்றன. பென்சன் வழங்குவதை தவிர்க்க ஓய்வு பெறும்  வயதை 60லிருந்து 65 ஆக உயர்த்தி னார்கள். பிறகு 65லிருந்து 70 ஆக  உயர்த்தினார்கள். ஒரு காலத்தில் அம்மை நோய், கக்குவான், காசநோய் என பல நோய்களில் இளவயதில் இறந்து கொண்டிருந்தார்கள். அறி வியல் முன்னேற்றம் காரணமாக நோய்  தாக்குதலின்றி மனிதனின் வாழ்நாள்  வயது கூடியுள்ளது. இது அறிவியல்  சாதனையாகும். நாம் ஆரோக்கிய மாக வாழ்வதற்காக, மருத்துவச் செலவுக்காகவும் பென்சன் தேவைப் படுகிறது. அந்த பென்சனை முதல் தேதியிலேயே வழங்க வேண்டும் என்று நாம் போராடுகிறோம். உங்கள் சங்கத்தை மேலும் பலப்படுத்த வேண்டும். நமது இளமை காலத்தில் இந்த போக்குவரத்துத் துறைக்காக உழைத்தோம். ஓய்வு காலத்தில் நம்மை காக்க வேண்டிய பொறுப்பு இந்த துறைக்கு உண்டு என்ற அடிப் படையில் நமது போராட்டத்தை மேலும் முன்னெடுத்துச் செல்வோம். இவ்வாறு அ.சவுந்திரராசன் பேசினார்.  (நநி)