tamilnadu

img

தமிழ்நாட்டில் முதல்முறையாக கோயம்பேட்டில் ஆதார் சேவை மையம்

சென்னை, ஆக. 31- தமிழ்நாட்டில் முதல் முறையாக சென்னை கோயம்பேட்டில் மத்திய அரசின் ஆதார் சேவை மையம் அமைக்கப்படுகிறது. அனைவருக்கும் ஆதார் அட்டை அத்தியா வசிய அடையாளமாக உள்ளது.ஆதார்  அட்டையில் சிறிய எழுத்துப்பிழை இருந்தா லும் அதை அடையாளப்படுத்துவதில் சிரமம்  ஏற்படுகிறது. அரசு, வங்கி சேவை தொடர்பாக  ஆதார் அட்டையை தாக்கல் செய்யும்போது அதில் உள்ள அனைத்து விவரங்களும் சரி யாக இருக்க வேண்டும். முகவரி மாற்றம் உள்ளிட்ட புதிய தக வல்களை ஆதாரில் பதிவு செய்வதிலும் பல்  வேறு சிரமங்கள் உள்ளன. இதைக் கருத்தில் கொண்டு மத்திய அரசு சார்பில் ஆதார் சேவா  கேந்திரா என்ற பெயரில் ஆதார் சேவை மையங்கள் அமைக்கப்படுகின்றன. இதன்  மூலம் ஆதார் அட்டைகளுக்குத் தேவையான  தகவல்களைத் தவறு இல்லாமல் முறைப் படி பதிவு செய்யலாம்.

தமிழ்நாட்டில் முதல் முறையாகச் சென்னையில் மத்திய அரசின் ஆதார் சேவை  மையம் அமைக்கப்படுகிறது. கோயம்பேடு ஜவகர்லால் நேரு சாலையில் உள்ள டென்ஸ்கொயர் மாலில் இது செயல்பட உள்ளது. இங்கு ஆதார் அட்டை தொடர்பான  அனைத்து சேவைகளையும் பெறலாம்.தின மும் ஆயிரம் பேர் ஆதார் தொடர்பான தங்க ளது தகவல்களையும், திருத்தங்களையும் பதிவு செய்யலாம். காலை 9.30 மணி முதல்  மாலை 6 மணி வரை இந்த ஆதார் சேவை மையம் செயல்படும். செவ்வாய்க்கிழமை விடுமுறை. ஆதார் தொடர்பான திருத்தங்கள் செய்  வது, புதிய தகவல்களைப் பதிவு செய்வ தற்காக ரூ.50 கட்டணம் செலுத்த வேண்டும்.  புதிதாக ஆதார் பெறுபவர்கள் எந்த கட்டண மும் செலுத்த வேண்டியது இல்லை.இந்த ஆதார் சேவை மையம் மூலம் திருத்தம், புதிய பதிவுகளைச் செய்ய விரும்புவோர். http://appointments.uidai. gov.in/bookappointment.aspx என்ற இணைய தள முகவரியில் ஆன்லைன் மூலம் முன்பதிவு  செய்ய வேண்டும். அதற்குத் தேவையான சான்றிதழ்களையும் கொண்டு செல்ல வேண்டும். குறிப்பிட்ட தினத்தில் சென்று டோக்கன் பெற வேண்டும். சான்றிதழ்கள் முறைப்படி சரிபார்க்கப்பட்டு ஆதார் அட்டை யில் தகவல் பதிவேற்றம் செய்யப்படும். சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்ட பிறகு  ரூ.50 கட்டணம் செலுத்தி தேவையான திருத்தம், பதிவுகளைச் செய்துகொள்ளலாம். இந்த சேவை மையத்தில் 16 ஊழியர்கள் ஆதார் தகவல்களைப் பதிவு செய்யும் பணி யில் ஈடுபடுவார்கள்.