tamilnadu

img

ஆழ்கடல் மீனவர்களை மீட்க நடவடிக்கை

சென்னை, டிச. 4- தென்மேற்கு அரபிக்கடலில் உருவான  காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக  மாற வாய்ப்புள்ள நிலையில் ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் மீனவர்  களை மீட்க நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ளதாக மீன்வளத்துறை அமைச்சர் டி. ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், புயல் எச்சரிக்கையை தொடர்ந்து ஆழ்க்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் விசைப்படகுகள் அரு கில் உள்ள கடற்கரைக்கு திரும்பும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரி விக்கப்பட்டுள்ளது. 650 மீனவர்களுடன் சென்ற 50  விசைப்படகுகள் 270 நாட்டிக்கல் தொலை வில் இருப்பதாகவும், காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் அவர்களை உட னடியாக பாதுகாத்திட கடலோர காவல் படையினரிடம் உதவி கேட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆபத்தில் இருந்த 22 விசைப்படகுகளை சேர்ந்த 220 மீனவர்கள் மீட்கப்பட்டு கரைக்கு கொண்டு வரப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.