tamilnadu

img

5, 8 வகுப்புகளுக்கு பொதுத்தேர்வை கைவிடுக!

பள்ளிக்கல்வித்துறை அமைச்சரை நேரில் சந்தித்து  மார்க்சிஸ்ட் கட்சி தலைவர்கள் வலியுறுத்தல்

சென்னை,ஜன.28- 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வை கைவிட வேண்டும் என்று தமிழக அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், மத்தி யக்குழு உறுப்பினர் டி.கே. ரங்கராஜன் எம்.பி., மாநிலக்குழு உறுப்பினர் ஆர். பத்ரி ஆகியோர் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் அவர்களை ஜனவரி 28 அன்று தலைமைச் செயலகத்தில் நேரில் சந்தித்து கடிதம் அளித்தனர்.  அமைச்சரிடம் அளிக்கப்பட்டுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

நீண்டகாலமாக...

தமிழகத்தில் பள்ளிக் கல்வித்துறை யில் பல்வேறு முற்போக்கான நடை முறைகளை நாம் நீண்ட காலமாக அம லாக்கி வருவதோடு, இலவச கல்வி, கல்விக்கான உபகரண பொருட்களை இலவசமாக வழங்குதல் ஆகிய நடை முறைகளை அமலாக்கி வருகிறோம்.  மேலும் மாணவர்களுக்கு சத்தான உணவுகளை பள்ளிக்கூடங்களில் வழங்கி வருவதிலும் முன்மாதிரி மாநிலமாக உள்ளோம். கல்வித்துறையில் இதர மாநிலங்களை ஒப்பிடும் போது தமிழகம் முன்னணி மாநிலமாக உள்ளது. இந்நிலையில் இதற்கு முரணாக 5  மற்றும் 8ஆம் வகுப்புகளுக்காக அறி விக்கப்பட்டுள்ள பொதுத்தேர்வு முறை மாநிலத்தின் கல்வி நிலையை பின்னுக்கு தள்ளிவிடும் என்பதை தங் களது கவனத்திற்கு தெரிவித்துக் கொள் கிறோம்.

எந்த மாநிலத்திலும் இல்லாத...

இந்தியாவில் வேறு எந்த மாநி லத்திலும் 5 மற்றும் 8ஆம் வகுப்புகளுக் கான பொதுத் தேர்வுகள் நடைமுறையில் இல்லை. இத்தேர்வு அறிவிப்பின் மூல மாக சின்னஞ்சிறு மாணவர்கள் மத்தி யில் தேர்வு பயம் ஏற்படும் என்பதோடு, கிராமப்புற ஏழை மாணவர்களின் கல்வி பெரிதும் பாதிக்கப்படும் நிலை உருவாகும். தமிழக அரசால் பிறப்பிக்கப் பட்டுள்ள அரசாணை 164 என்பது  இலவச மற்றும் கட்டாயக் கல்விச் சட்டம் 2009-க்கு எதிரானதாக அமைந்துள்ளது என்பதையும், குழந்தைகளுக்கான கட்டாய கல்வியை மறுக்கும் ஒரு அம்சமாக அமைந்துள்ளது என்பதை யும் குறிப்பிட விரும்புவதோடு, அர சியல் சாசனத்தில் பிரிவு 21 A வழங்கி யுள்ள உரிமைகளை உறுதிப்படுத்துவதி லிருந்தும் விலகி நிற்கிறது என்பதை தங்களின் மேலான கவனத்திற்கு கொண்டு வருகிறோம். மேலும் இந்த  உத்தரவானது இயந்திரகதியில் பிறப்பிக்கப்பட்டுள்ளதேயன்றி நடை முறைகளை கணக்கில் கொள்ள வில்லை என்பதையும் கவனப்படுத்த விரும்புகிறோம். இந்த அரசாணை யானது கல்வி உரிமைச்சட்டம் 2009-இன் படி 8 ஆம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி பெறும் வகையில் எவ்வித தேர்வு முறைகளும் இருக்கக்கூடாது என்பதற்கு முற்றிலும் முரணாக உள்ளது. இந்த அரசாணையில் குறிப் பிட்டுள்ளவாறு கல்வி உரிமை திருத்தச் சட்டம் 2009-இல் எந்தவொரு பொதுத் தேர்வினையும் வலியுறுத்தவில்லை என் பதையும் சுட்டிக் காட்ட விரும்புகிறோம்.

2019-20 ஆம் கல்வியாண்டில் தமிழ கத்தில் 1 முதல் 8 வரையிலான வகுப்பு களுக்கு மூன்று பருவ தேர்வு முறை கள் அறிமுகப்படுத்தப்பட்டு, முதல் பருவத்திற்கான பாடப் புத்தகங்களும் வழங்கப்பட்டன. அந்த பாடப்புத்தகங் களுக்கான காலம் கடந்த 23.9.2019 அன் றோடு முடிவடைந்து, அதற்கடுத்த பருவத்திற்கான பாடப்புத்தகங்களும் வழங்கப்பட்டுள்ளன. இவற்றில் 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளும் உள்ளன. இத்த கைய பாடப்புத்தகங்கள் வழங்கப்படும் போதும், அதற்கு பிறகும் கூட மாண வர்களுக்கோ அல்லது பெற்றோர் களுக்கோ பொதுத்தேர்வு முறை அம லாக்கப்படுவது என்பது தெரியாது.  எனவே இந்நிலையில் பொதுத் தேர்வை அமலாக்குவது மாணவர் களையும், பெற்றோர்களையும் மிகுந்த இன்னல்களுக்கு உள்ளாக்கும்.  தற் போது நடைமுறையில் உள்ள பருவ தேர்வு முறையென்பது உருவாக்க மதிப்பீடு மற்றும் சுருக்க மதிப்பீடு அடிப்படையில் உள்ளதோடு, இரண் டிற்கும் தனித்தனியான மதிப்பெண்கள் வழங்கப்பட்டு அதனடிப்படையில் கிரேடுகள் வழங்கப்படுகின்றன. எனவே, மேலே குறிப்பிடப்பட்டுள்ள மாணவர்கள் நலன் சார்ந்த நடை முறைகளை அப்படியே கைவிட்டு விட்டு, 5 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு முறையை புகுத்து வது என்பது அவர்களை மன உளைச் சலுக்கு உள்ளாக்கும் என்பதோடு, கல்வி உரிமைச் சட்டம் 2009 இல் பிரிவு 29 மற்றும் 30 இல் குறிப்பிட்டுள்ள அம்சங்களை மீறுவதாக அமைந்து விடும்.

பிஞ்சு நெஞ்சங்கள் பதறிவிடும்

மேலும், வழக்கமான தேர்வுக்கும், வாரியத்தால் நடத்தப்படும் பொதுத் தேர்வுக்கும் அடிப்படையான வேறு பாடுள்ளது. வழக்கமான தேர்வு வகுப்பறையில் சம்பந்தப்பட்ட ஆசிரியரே நடத்துவது. வாரிய தேர்வு என்பது பத்தாம், பனிரெண்டாம் வகுப்புகளுக்கு நடத்துவதைப் போல மாநில முழுவதற்குமான பொதுத் தேர்வாகும். குழந்தைப் பருவத்தி னர் மீது இத்தகைய பொதுத் தேர்வை திணிப்பது குழந்தைகள் அச்ச மடைவதற்கும், பதற்றமடைவதற்கும் மட்டுமே உதவும்.  பதற்றமில்லாமல், அச்சமில்லாமல் தங்கள் கற்றல் விளைவுகளை வெளிப் படுத்தக் கூடிய வாய்ப்பை மாணவர் களுக்கு உருவாக்கித்தருவது தான் கல்வியின் நோக்கமாக இருக்க வேண்டும். பிஞ்சு நெஞ்சங்களில் தேர்வு பயத்தை ஏற்படுத்துவது என்பது எவ்விதத்திலும் ஏற்க இயலாதது. குழந்தைகளுக்கு கற்றல் சுகமானதாக இருக்க வேண்டும். சுமையானதாக இருக்கக்கூடாது. அப்போதுதான் கல்வியின் மீதும், கற்றலின் மீதும் குழந்தைகளுக்கு ஈர்ப்பு உருவாகும். 5, 8 ஆம் வகுப்புகளுக்குப் பொதுத்தேர்வு வைப்பதன் மூலம் குழந்தைகளுக்குக் கல்வியின் மீதும், கற்றலின் மீதும் சலிப்பும், வெறுப்பும் ஏற்படவே வழிவகுக்கும்.

10, 12 ஆம் வகுப்பு மாணவர்களைக் கூட தேர்வு பயம் எந்த அளவிற்கு ஆட்டிப் படைக்கிறது என்பது அனைவருக்கும் தெரியும். அவ்வாறு இருக்கும்போது மழலை மனம் மாறாத 5, 8ஆம் வகுப்பு மாண வர்களுக்குப் பொதுத்தேர்வு மிகுந்த அச்ச த்தையும், சுமையையும், மனஉளைச்ச லையும் ஏற்படுத்தும் என்பது தெளிவு. பொதுத்தேர்வு இல்லாத நிலையிலேயே தொடக்கக்கல்வி நிலையில் இடைநிற்றல் ஏற்பட்டு மாணவர்களது கல்வி தடைபட்டு விடக்கூடாது என்பதற்காகவே 8 ஆம் வகுப்புவரை அனைவருக்கும் தேர்ச்சி என்ற நிலை கொண்டுவரப்பட்டது.

இடைநிற்றல் தீவிரமாகும்

ஆனால், இன்று தமிழக அரசு 5 ஆம் வகுப்பிலேயே பொதுத்தேர்வைக் கொண்டுவருவது குழந்தைகளை குறிப்பாக, ஏழை, எளிய கிராமப்புறக் குழந்தை களை கல்விக்கூடங்களிலிருந்து வெளி யேற்றுவதற்கு உதவி செய்வதாக அமைந்து விடும். பொதுத்தேர்வு என்று வரும்பொழுது அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி களில் பயிலும் ஏழைக் குழந்தைகளே அதிகம் பாதிக்கப்பட்டு படிப்பை பாதியில் விட்டு  விட்டு மாணவச் செல்வங்கள் குழந்தை தொழி லாளர்களாகவும், கூலித் தொழிலாளர் களாகவும் மாறும் நிலை உருவாகும். இது  மிகப்பெரும் சமூக அநீதியை உருவாக்கிடும் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

உச்சக்கட்ட குழப்பம்

தமிழக அரசு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மாணவர்களின் புத்தகச்சுமையைக் குறைப்பதற்காகவும், பாடச்சுமையைக் குறைப்பதற்காகவும் முப்பருவ முறையைக் கொண்டுவந்தது. 5 புத்தகங்கள் 2 புத்தகங் களாக குறைக்கப்பட்டது. இதனால் ஆண்டு முழுவதும் படிக்க வேண்டிய பாடங்களை மூன்று பருவங்களாய்ப் பிரித்துப் படிக்கும் நிலை தற்போது நடைமுறையில் உள்ளது. ஒரு பருவத்தில் படித்த பாடங்கள் அந்தப் பருவத்தேர்வோடு முடிந்துவிடும். அடுத்த பருவத்திற்கு வேறு புத்தகங்கள் வந்து விடும். ஆனால், தமிழக அரசு தற்போது அறி வித்துள்ள பொதுத்தேர்வில் 5, 8ஆம் வகுப்புகளுக்கு மூன்று பருவங்களி லிருந்தும் வினாக்கள் கேட்கப்படும் என்று  அறிவித்துள்ளது உச்சக்கட்ட குழப்பத்தை யும் தேவையற்ற முரண்பாட்டையும் ஏற்படுத்தியுள்ளது.

கைவிடுக!

எனவே, தமிழகத்தில் உள்ள நீண்ட கல்வி மரபிற்கு முரணாக,  5 மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு முறையை அமலாக்கி, மாணவர்களையும்,  பெற்றோர்களையும் அச்சத்திற்குள்ளாக்கும் நடைமுறையை கைவிட வேண்டும் என வலியுறுத்துகிறோம். இப்பொதுத்தேர்வு முறை மாணவர்களின் இடைநிற்றலுக்கும், படிப்பை துறப்பதற்கும் காரணமாகி விடக்கூடாது எனவும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு வின் சார்பில் தமிழக அரசை கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.





 

;