tamilnadu

img

இலங்கை அரசியலமைப்பின் 19ஆவது திருத்தம் ரத்து

கொழும்பு, ஆக. 20- இலங்கை அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்தை ரத்து செய்ய அமைச்சரவை புதனன்று (19) அங்கீகாரம் வழங்கியுள்ளது. ஜனாதிபதி செயலகத்தில் புத னன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில்   19ஆவது திருத்தத்தை ரத்து செய்ய அங்கீகாரம் வழங்கப் பட்டுள்ளதாக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். 19ஆவது திருத்தத்திற்கு பதிலாக 20ஆவது திருத்த சட்டமூல வரைவை தயாரிப்பதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அவர் கூறியுள்ளார். இலங்கை அரசியலமைப்பின்படி ஜனாதிபதியொருவர் 2 தடவை மாத்திரமே பதவி வகிக்க முடியும் என்பதை 18ஆவது திருத்தத்தின் மூலம் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜ பட்ச மாற்றியமைத்திருந்தார்.

இந்த 18ஆவது திருத்தத்தை நிச்ச யம் ரத்து செய்வதாக தெரிவித்தே, 2015ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்த லில் மைத்திரிபால சிறிசேன போட்டி யிட்டு வெற்றி பெற்றிருந்தார். அதன் படி, 19ஆவது திருத்தம்செய்யப்பட்டது. அதுமட்டுமின்றி, இலங்கையில் சுயாதீன ஆணைக்குழுக்களை அமைக்கும் வகையில் 17ஆவது திருத்தம் கொண்டு வரப்பட்ட போதி லும், அதனை நடைமுறைப்படுத்தும் சரத்துக்கள் 19ஆவது திருத்தத்தி லேயே கொண்டுவரப்பட்டன. அதன்படி, தேர்தல் ஆணைக்குழு, பொதுச் சேவைகள் ஆணைக்குழு, தேசிய போலீஸ் ஆணைக்குழு, கணக் காய்வு சேவை ஆணைக்குழு, மனித உரிமைகள் ஆணைக்குழு, எல்லை நிர்ணய ஆணைக்குழு, இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு, நிதி ஆணைக்குழு, அரச கரும மொழிகள் ஆணைக்குழு என ஆணைக்குழுக்கள் அமைக்கப்பட்டன.