சென்னை,டிச.20- 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு அரையாண்டுத் தேர்வு வினாத்தாள்கள் சமூகவலைதளங்களில் முன்கூட்டியே வெளியாகி உள்ளதாக புகார் எழுந்துள்ளது. 10 ஆம் வகுப்புக்கு கடந்த 13 ஆம் தேதியும், 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு கடந்த 11 ஆம் தேதியும் தொடங்கிய அரையாண்டுத் தேர்வுகள் வரும் 23 ஆம் தேதி வரை நடைபெறுகின்றன.
இந்நிலையில் ஹலோ எனும் செயலியில், அரையாண்டுத் தேர்வு வினாத்தாள்கள் தேர்வுக்கு முன்னரே பதிவேற்றம் செய்யப்படுவதாக கூறப் படுகிறது. 10 ஆம் வகுப்பு அறிவியல் தேர்வின் வினாத்தாள் ஒரு நாள் முன்னதாகவும், 12 ஆம் வகுப்பு வேதியியல் தேர்வுக்கான வினாத்தாள் 2 நாட்களுக்கு முன்னரும் வெளியானதாகக் கூறப்படுகிறது. அதே போல் கடந்த 18 ஆம் தேதி நடைபெற்ற 11 ஆம் வகுப்பு வேதியியல் தேர்வுக்கான வினாத்தா ளும், முந்தைய நாளே வெளியானதாகக் கூறப்படு கிறது. இச்சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை சார் பில் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.