tamilnadu

img

1.97 லட்சம் பேர் கைது

சென்னை, ஏப்.16- கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இந்த உத்தரவை மீறி தேவை இல்லா மல் வாகனங்களில் ஊர் சுற்றுபவர்கள் மீது காவல்  துறையினர் வழக்குப்பதிவு செய்து, கைது நட வடிக்கை எடுத்து வருகிறார்கள். அவர்கள் சென்ற வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுகிறது. தமிழகம் முழுவதும், 1 லட்சத்து 97 ஆயிரத்து  536 பேர் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்.  1 லட்சத்து 56 ஆயிரத்து 315  வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ரூ.82, 32,644 அபராதம் வசூலிக்கப்பட்ட தாக காவல்துறை  தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.