tamilnadu

இந்தோனேசியாவில் அதிர்ச்சி

ஜகார்த்தா,ஏப்.28-இந்தோனேசியா நாட்டின் பொதுத் தேர்தலில் ஓய்வில்லாமல் பணியாற்றியதால் 272 பேர் உயிரிழந்துள்ளனர்.தென் கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான இந்தோனேசியாவில் அந்நாட்டின் அதிபர் பதவிக்கான தேர்தல், நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களுக்கு ஒருங்கிணைந்த தேர்தல் ஏப்ரல் 17 ஆம் தேதியன்று ஒரேநாளில் நடத்தப் பட்டது. இதில் 80 சதவீதம் பேர் வாக்களித்தனர்.இந்தோனேசியாவின் பெரும்பா லான பகுதிகளில் எட்டு லட்சம் வாக்குச்சாவடிகள் அமைப்பது, வாக்குச்சீட்டு முறையில் பதிவான வாக்குகளை எண்ணுவது, அவற்றை மேற்பார்வையிடுவது என தேர்தல் பணிகள் கடுமையாக இருந்தது.இந்நிலையில் பொதுத் தேர்த லில் வாக்கு எண்ணிக்கை வரையிலான ஓய்வில்லாத தொடர் பணிகளால், 272 பேர் பலியாகியுள்ளனர்.இதுதொடர்பாக இந்தோனேசிய தேர்தல் ஆணையத்தின் செய்தித் தொடர்பாளர் ஆரிப் பிரியோ சுசான்ட்டோ செய்தியாளர்களிடம் கூறுகையில், 17-ஆம் தேதி நடை பெற்ற தேர்தல் சம்பந்தப்பட்ட கூடுதல் பணிச்சுமையால் உடல்நிலை பாதிக்கப்பட்டு, சனிக்கிழமை இரவுவரை 272 பேர் உயிரிழந்துள்ள னர். மேலும் 1878 பேர் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.தினக்கூலி அடிப்படையில் பணியாற்றி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அவர்களின் ஓராண்டு சம்பளத்துக்கு இணை யான பணத்தை இழப்பீடாக அளிக்க தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. இன்னும் ஒரு சில இடங் களில் மறுவாக்குப்பதிவு நடை பெற்று வருவதால், தேர்தல் முடிவுகள் மே மாதம் 22-ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று தெரி வித்துள்ளார்.

;