tamilnadu

img

இந்தோனேசியாவில் மழை வெள்ளத்தில் பலியானோர் எண்ணிக்கை 26 ஆக உயர்வு

இந்தோனேசியாவில் கடுமையான மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளது.

இந்தோனேசியாவில் கடுமையான மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஜகார்த்தா உட்பட அதன் அருகிலுள்ள நகரங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதில் இதுவரை 26 பேர் பலியாகி உள்ளனர். பல இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளதால் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வேறு இடங்களுக்கு இடம் பெயர்ந்துள்ளனர். பல மாவட்டங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. மீட்புப் பணிகள் விரைவாக நடந்து வருவதாகவும், விரைவில் இயல்பு நிலை திரும்பும் என்றும் இந்தோனேசிய அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

;