tamilnadu

img

டிரம்புக்கு 2 மில்லியன் டாலர் அபராதம்

நியூயார்க், நவ. 8- தேர்தல் பிரச்சார செலவுக்காக தனது தொண்டு நிறுவனத்திலிருந்து வந்த பணத்தை தவறாக பயன்படுத்தியதால் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்புக்கு நியூயார்க் நீதிபதி சேலியன் ஸ்கார்புலா 2 மில்லியன் டாலர்களை அபராதம் விதித்துள்ளார். கடந்த 2018ல் தி டொனால்டு ஜே டிரம்ப் பவுண்டேஷன் மூடப்பட்டது. இந்த தொண்டு நிறுவனம் அமெரிக்க அதிபரின் விருப்பத்துக்கு ஏற்ப செயல்படுகிறது என அரசு தரப்பு வழக்கறிஞர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதுபோன்ற அறக்கட்டளைகளில் தலைமை பொறுப்பு வகிப்பவர்கள் அரசியலில் ஈடுபட முடியாது என நீதிபதி கூறி இருந்தார். அதற்கு, டிரம்ப், ’எல்லா பணமும் தொண்டு உதவிக்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டது` என்று கூறியுள்ளார்.

நியூயார்க்கின் அட்டர்னி ஜெனரல் அரசியல் காரணங்களுக்காக தன்னை அவமானப்படுத்த வேண்டும் என்பதற்காக இதை செய்தார் என்றும் டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார். நீதிபதி சேலியன் ஸ்கார்புலா, அறக்கட்ட ளைக்கான விதியை டிரம்ப் மீறிவிட்டார். அமெரிக்க ராணுவ வீரர்களுக்காக திரட்டப்பட்ட நிதியை 2016 அமெரிக்க தேர்தலில் பயன்படுத்தினார் என கூறியுள்ளார். “டிரம்புக்கு 2 மில்லியன் டாலர் அபராதம் விதிக்கிறேன். இந்த பணம் இப்போது செயல்பாட்டில் இருந்திருக்க வேண்டிய அறக்கட்டளைக்கு சென்றிருக்க வேண்டும்” என தீர்ப்பு வழங்கினார். மேலும், இதை அவர் தன்னுடைய சொந்த பணத்தில் இருந்து கொடுக்க வேண்டும் என்றும், அவருக்கு எந்த தொடர்பும் இல்லாத 8 அறக்கட்டளைகளுக்கு இந்த பணம் செல்ல வேண்டும் என்றும் கூறியுள்ளார். இதன் மூலம், பணத்தை சுயலாபத்திற்காக டிரம்ப் பயன்படுத்தி உள்ளதை ஒப்பு கொண்டுள்ளார் என ஜேம்ஸ் கூறியுள்ளார்.

;