tamilnadu

img

இந்நாள் பிப். 27 இதற்கு முன்னால்

1812 - இங்கிலாந்து பிரபுக்கள் அவையின் உறுப்பினராக (1809 மார்ச்சிலிருந்தே இருந்தாலும்!), தன் முதல் உரையை நிகழ்த்திய கவிஞர் பைரன் (பிரபு), அவரது கவுண்ட்டியான நாட்டிங்ஹாம்ஷை யரில் நடைபெற்றுக்கொண்டிருந்த லடைட் வன்முறைகளுக்கு ஆதரவாகப் பேசினார். இயந்திரங்களைப் பயன்படுத்தும் தொழில்மயத்தின் ‘கேடுகள்’ குறித்து விரிவாகவும், கவித்துவமாகவும் பேசினார் பைரன்! லடைட் என்பது, போராடிக்கொண்டிருந்த ஆங்கிலேய துணி ஆலைத் தொழிலாளர்களைக் குறிக்கப்பயன்படுத்தப்பட்ட பெயராகும். பெரிய தொழிற்சங்கங்கள் எதுவும் இந்த எதிர்ப்பியக்கங்களில் ஈடுபடாத நிலையில், உறுதிமொழியின் அடிப்படையில் இயங்கிய இந்த அமைப்பு, தங்கள் வேலைகளைப் பறிப்பதாகக்கூறி, நெசவுத்துறை இயந்திரங்களை அடித்து நொறுக்குவதை இயக்கமாகச் செய்தது.

இயந்திரங்க ளைப் பயன்படுத்துவது, தொழிலாளர்களுக்கு எதிரான வஞ்சகமும், மோசடியு மான செயல் என்று இந்த அமைப்பு கூறியது. இயந்திரங்கள் உற்பத்தியில் ஈடு பட்டால், தொழில் நுணுக்கங்களைக் கற்றுக்கொள்ள தொழிலாளர்கள் செலவிடும் நேரம் பயனற்றதாகிவிடும் என்று லடைட்கள் அஞ்சினர். தொழிற்புரட்சியின் மிகப்பெரிய பயன் முதலில் நெசவுத்துறைக்குத்தான் கிடைத்தது. இந்தியாவில் கூலி குறைவாக இருந்ததால், இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்ட துணியுடன் இங்கிலாந்து போட்டியிட முடியவில்லை. இங்கிலாந்தின் நெசவுத்துறையைக் காக்க, காலிக்கோ சட்டங்கள் இயற்றப்பட்டாலும்கூட, செலவைக் குறைக்க இயந்திரங்கள் அவசியமாயின. வேலையிழப்புகளுடன், நெப்போலியப் போர்களினால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிகளும் சேர்ந்துகொள்ள, இயந்திரங்க ளைப் பயன்படுத்திய ஆலைகளுக்குத் தொழிலாளர்கள் தீவைக்கத்தொடங்கினர். 1811இல் நாட்டிங்ஹாம்ஷையரில் தொடங்கி, 1816வரை இங்கிலாந்து முழுவதும் நடைபெற்ற இந்தப் போராட்டம், முதலாளிகளின் தனிப்பட்ட துப்பாக்கிசூடுகளில் தொடங்கி, ராணுவத்தின் ஒடுக்குமுறைவரை மேற்கொள்ளப்பட்டு, முழுமையாக அடக்கப்பட்டது.

1779இல் பணியிடத்தில் சவுக்கடி பெற்ற, நெட் லட் என்ற தொழிலாளி, அங்கிருந்த நெசவுக் கருவிகளை உடைத்து நொறுக்கியதாகவும், ‘லட் டிட் இட்’(லட் அதைச் செய்தார்) என்ற ஆங்கில வாக்கியத்திலிருந்து, இயந்திரங்களை அழிப்ப வர்கள் லடைட் என்று அழைக்கப்பட்டதாகவும் கூறப்பட்டாலும், இதற்கு உறுதியான ஆதாரங்கள் இல்லை. ஆனால், இயந்திரமயமாக்கலையும், தொழில்நுட்ப முன்னேற் றங்களையும் எதிர்ப்பவர்களைக் குறிக்கும் சொல்லாக, ஆங்கிலத்தில் இந்த லடைட் நிலைப்பெற்றுவிட்டது! இன்றைய பிரச்சனைகளான சுற்றுச்சூழல் சீர்கேடு உள்ளிட்ட வற்றை, புதிய தொழில்நுட்பங்களால் தீர்க்க முடியாது என்றும், எல்லா புதிய தொழில் நுட்பங்களையும் கைவிட்டு, (ஆதி மனிதர்களைப்போல!) இயற்கையாக வாழவேண்டும் என்றும் கூறுவது இன்று நியோ-லட்டிசம் என்று அழைக்கப்படுகிறது!

- அறிவுக்கடல்