tamilnadu

img

வெடி விபத்தை எதிர்த்து லெபனானில் பொதுமக்கள் போராட்டம்

லெபனானில் நடைபெற்ற வெடிவிபத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பெய்ரூட்டில் கடந்த செவ்வாயன்று நிகழ்ந்த வெடி விபத்தால் 137 பேர் உயிரிழந்தனர். 3,00,000 மேற்பட்டோர் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர்.  வெடிமருந்து கிடங்கு குறித்து முன்னரே அமைச்சரவையை எச்சரித்திருந்தும், அலட்சியத்தின் காரணமாக இந்த விபத்து நிகழ்ந்திருப்பதாக தகவல் பரவியது.இதனால் ஆத்திரமடைந்த மக்கள் லெபனான் நாடாளுமன்ற நுழைவாயில் அருகே போராட்டத்தில் ஈடுபட்டனர். சாலைகளில் தீ வைத்தும், கற்களை வீசி எறிந்தும் போராட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபட்டதால் கலவரத் தடுப்பு படையினர் குவிக்கப்பட்டனர்.

;