உலகமே கொரோனா அச்சத்தில் உள்ள நிலையில்,மக்களும் தன்னை தானே பாதுகாத்துக் கொள்ள முக கவசம்,கைக்கு கிலவுஸ் மற்றும் சேனிடைசர்கள் முதலான பொருட்களை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் ஃபிரான்ஸ் தொழில்துறை அமைச்சர் ஏக்னஸ் பன்னியர் ருனாச்சர் நேற்று நடைபெற்ற பாஸ்டைல் தின நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்தவர் தன் முக கவசத்தை மறந்து விட்டதை உணர்ந்து பதறி தன் காரை நோக்கி ஓடினார்.
இதை பார்க்கும் போது இதை போலவே ,நாமும் முக கவசத்தை மறந்து வெளியில் வந்த பின்னர் நியாபகம் வந்து முக கவசத்தை எடுக்க வீட்டினுள் ஓடும் நிகழ்வு எத்தனை பேர்க்கு நடைபெற்று உள்ளது.
இது போன்ற நிகழ்வுகள் கொரோனா நம் சமுகத்தில் எப்படி பரவிக் கொண்டிருக்கிறது என்பதற்கான நிதர்சனமான உண்மை