பிரேசிலில் தனியார் மருத்துவமனை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
பிரேசில் நாட்டில் பாதிம் என்ற தனியார் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில், நேற்று இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. மருத்துவமனையில் தீ மளமளவென பரவியதால் அங்கிருந்தவர்கள் உடனடியாக அப்புறப்படுத்தப்பட்டனர். இந்நிலையில், இந்த தீ விபத்தில் சிக்கி 10 பேர் பலியாகினர். மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.