tamilnadu

img

கொரோனா தடுப்பு மருந்து அவிஃபாவிர்...

மாஸ்கோ:
கொரோனா வைரஸ் இனப் பெருக்கத்தை கட்டுப்படுத்தும். அல்லது இனப்பெருக்க வழிமுறைகளை முழுமையாக சீர்குலைக்கும் தன்மை கொண்ட அவிஃபாவிர்தடுப்பு மருந்தை ரஷ்யா மருத்துவமனைகளுக்கு வழங்கவுள்ளது.உலகம் முழுவதும்  கொரோனாவேகமாகப்பரவி வருகிறது. சர்வதேச அளவில் கொரோனா பாதிப்பில் அமெரிக்கா, பிரேசிலை அடுத்து மூன்றாவது இடத்தில் ரஷ்யா உள்ளது. அங்கு தொற்று எண்ணிக்கை ஐந்து லட்சத்தை தாண்டி உள்ளது. இந்த நிலையில்  கொரோனா சிகிச்சைக்கு அங்கீ கரிக்கப்பட்ட முதல் மருந்தை ரஷ்யா அறிவித்துள்ளது. 

அவிஃபாவிர் (Avifavir)என்ற மருந்து ரஷ்ய நாட்டின் பல மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்குப்பயன்படுத்தப்படும் என அந்நாட்டு அரசு வெள்ளியன்று தெரிவித்துள்ளது. ரஷ்ய அரசின் ஐம்பது சதவீத முதலீடு உள்ள கெம்ரார் (ChemRar) என்ற நிறுவனம் இந்த மருந்தை தயாரித்துள் ளது.நாட்டில் வைரஸ் தொற்று அதிகரிப்பை கட்டுப்படுத்த தடுப்பு மருந்தை கண்டுபிடிப்பதற்கான சோதனைகள் நடந்து வரும் நிலையிலேயே இந்தமருந்துக்கு ரஷ்ய சுகாதார அமைச்ச
கம் அங்கீகாரம் வழங்கியுள்ளது.

ரஷ்ய நேரடி முதலீட்டு நிதியம் மற்றும் கெம்ரார் குழுமம் ஆகியவைஇணைந்து கொரோனா வைரசுக்கு எதிரான முதல் தொகுதி அவிஃபாவிர்மருந்தை ரஷ்ய  மருத்துவமனைகளுக்கு வழங்கியுள்ளதாக ரஷ்ய நேரடி முதலீட்டு நிதியம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.மாதம்தோறும் 6,0000 பேருக்குசிகிச்சை அளிக்கத் தேவை யான மருந்து உற்பத்தி செய்யப்படுவதாகவும், பத்து நாடுகள் இந்த மருந்தைவாங்க விருப்பம் தெரிவித்துள்ளதாக வும் ரஷ்ய மருந்து கட்டுப்பாட்டுத்துறை தெரிவித்துள்ளது. தேவைப்பட்டால் இதன்  உற்பத்தி இரண்டு மில்லியனாக அதிகாரிக்கப்படும்.ரஷ்யா முழுவதும் இந்த மருந்துக்கு அதிகத் தேவை உள்ளது, நாட்டின் கிட்டத்தட்ட அனைத்து பகுதிகளுக்கும் விநியோகம் செய்வதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. மருத்துவ பரிசோதனைகளின் ஆரம்ப முடிவுகள் இந்த மருந்து உலகில் மிகவும் நம்பிக்கைக்குரிய ஒன்று என ரஷ்ய மருந்து கட்டுப்பாட்டுத் துறை தலைமை நிர்வாக அதிகாரி கிரில் டிமிட்ரிவ் கூறி உள்ளார். அவிஃபாவிர் கொரோனா வைரஸ் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்துகிறது. அல்லது இனப்பெருக்க வழிமுறைகளை முழுமையாக சீர்குலைக்கும் தன்மை கொண்டது என கிரில் டிமிட்ரிவ் தெரிவித்துள்ளார்.

;