tamilnadu

img

கொரோனா 1.10 கோடி மக்களை வறுமை நிலைக்கு தள்ளும் - உலக வங்கி எச்சரிக்கை

கொரோனா வைரஸ் தொற்றால் ஏற்படும் பொருளாதார நெருக்கடி கிழக்கு ஆசிய பகுதிகளில் மேலும் 1.10 கோடி (11 மில்லியன்) மக்கள் வறுமை நிலைக்குத் தள்ளப்படுவார்கள் என்று உலக வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது.
சீனாவின் உகான் பகுதியில் தொடங்கிய வைரஸ் தொற்று இன்று உலகம் முழுவதும் சுமார் 200 நாடுகளில் பரவியுள்ளது. இதனால் அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளின் பொருளாதாரம் ஸ்தம்பித்துள்ளது.  இதைத்தொடர்ந்து பொதுமக்கள்  உடலால் விலகி இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பல நாடுகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மக்கள் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி உள்ளனர்.  இத்தகைய சூழலில் கொரோனாவால் ஏற்படும் பொருளாதார நெருக்கடி கிழக்கு ஆசியாவில் மேலும் 1.10 கோடி(11 மில்லியன்) மக்கள் வறுமையில் தள்ளும் என  உலக வங்கி எச்சரித்துள்ளது. 
இதுகுறித்து கிழக்கு ஆசியா மற்றும் பசிபிக் உலக வங்கியின் தலைமை பொருளாதார நிபுணர் ஆதித்யா மேட்டூ கூறுகையில், 'கொரோனா உலக அளவில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இது ஒரு நாட்டின் வளர்ச்சியைத் தடுப்பதோடு பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதனால், சீனா கடும் வீழ்ச்சியை சந்திக்கும். 
உலக மக்கள் தொகையில் 5ல் 2 பங்கினர் வீட்டிற்குள் முடங்கியுள்ள நிலையில் வணிகம் முடங்கியுள்ளதால் கொரோனா பாதிக்கப்பட்ட  நாடுகள் பொருளாதார மந்த நிலையை எதிர்கொள்ளும். 
கிழக்கு ஆசியா மற்றும் பசிபிக் பிராந்தியத்தில், சீனாவைத் தவிர்த்து, மற்ற நாடுகளின் அடிப்படை வளர்ச்சி 1.3% ஆக குறையும். எனினும் உலக நாடுகளின் பொருளாதாரம் விரைவில் இயல்பு நிலைக்குத் திரும்பும்' என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

;