tamilnadu

பாகிஸ்தானில் படகு கவிழ்ந்து  விபத்து - 30 பேர் பலி

பாகிஸ்தானில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 30 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 
பாகிஸ்தானில் தர்பேலா பகுதியில் நடந்த படகு விபத்தில் சிக்கி 30 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும்  சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
பாகிஸ்தானின் வடமேற்கே கைபர் பக்துன்குவா மாகாணத்தின் ஹரிப்பூர் மாவட்டத்தின் தர்பேலா பகுதியில் ஆற்றில் படகு ஒன்று  கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில்  4 குழந்தைகள் உட்பட 30 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.  மீட்பு படையினரால் அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு விட்டன.  இந்த விபத்தில் சிக்கியவர்களில் 15 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர்.  
இதைத்தொடர்ந்து நடந்த விசாரணையில் அதிக எடையால் படகு விபத்தில் சிக்கியுள்ளது என போலீசார் தெரிவித்து உள்ளனர். 


 

;