tamilnadu

img

கடினமான யோகா செய்தபோது பால்கனியில் இருந்து தவறி விழுந்த பெண்

மெக்சிகோவில் இளம்பெண் ஒருவர் பால்கனியில் யோகா செய்தபோது, பிடி நழுவி 80 அடி உயரக் கட்டிட விளிம்பில் இருந்து தலைகீழாக விழுந்த சம்பவம் நடந்துள்ளது.

மெக்சிகோவில், 23 வயது உடைய இளம்பெண் அலெக்ஸா தெரசா, 6-வது தளத்தில் உள்ள தமது அறையின் பால்கனியில் யோகா பயிற்சி மேற்கொண்டார். கடினமான யோகாவை செய்யப் போவதாகக் கூறி, கைப்பிடி விளிம்பில் தலைகீழாகத் தொங்கிய அவர், பிடி நழுவி கீழே விழுந்தார். அவர் விழுவதற்கு முன் அவரது தோழி எடுத்த புகைப்படம் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

தலைகீழாக விழுந்த தெரசாவின் உடலில் 110 எலும்புகள் உடைந்துள்ளன. இரு கால்கள், முதுகு, இடுப்பு, தலை என பல இடங்களில் காயங்களோடு சிகிச்சை பெறும் அவருக்கு பெற்றோர் கோரிக்கையின் பேரில் 100-க்கும் மேற்பட்டோர் ரத்த தானம் வழங்க முன்வந்துள்ளனர். ஆபத்தான நிலையில் உள்ள அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். 
 

;