tamilnadu

img

லாகூர் மசூதி அருகே குண்டுவெடிப்பு - 8 பேர் பலி

பாகிஸ்தானின் லாகூரில் உள்ள சூஃபி மசூதி அருகே நடந்த வெடிகுண்டு தாக்குதலில் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

பாகிஸ்தானில் உள்ள கிழக்கு பஞ்சாப் மாகாணத்தின் தலைநகரான லாகூர் நகரில் புகழ்பெற்ற தாதா தர்பார் என்ற சூஃபி மசூதி அமைந்துள்ளது. ரமலான் நோன்பு நேற்று தொடங்கிய நிலையில், நூற்றுக்கணக்கானோர் மசூதிக்குள் உள்ளேயும் வெளியேயும் குவிந்து இருந்தனர். மசூதிக்கு வெளியே போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

இந்நிலையில், இன்று காலை 8.45 மணி அளவில், போலீசாரின் வாகனம் அருகே திடீரென குண்டு வெடித்தது. இதில் 8 பேர் பலியாகியுள்ளனர். படுகாயமடைந்த 24க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த தாக்குதல் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகள் செல்லும் வாகனத்தை குறிவைத்து நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


;